பகுதி- 42

4.1K 211 130
                                    

அட கொஞ்சம் கொஞ்சமாய் என்னை வட்டினாய்
கொஞ்சம் கொஞ்சமாய் என்னை மாற்றினாய்
இதயத்தின் மறுபக்கம் நீ கட்டினாய்
இனி என்ன சொல்லுவேன் இன்று ..?
நான் அமுத நஞ்சையும் உண்டு
இனி ரெக்கை இன்றியே நான் போவேன் வான் மீதிலே ...

காலை 8 மணிக்கு சென்னையில் பிளைட் என்பதால்  இரவு 11 மணிக்கு இருக்கும் கோயம்புத்தூர் டூ சென்னை பிளைட்டிற்கு செல்ல முடிவெடுத்து தனது உடைமைகளை பேக் செய்து விட்டு கிளம்பி விட்டான்.

இன்னும் தியாவிடம் கூறவில்லை அர்ஜூவிடமும் கூறிவிட்டான் அவளிடம் தான் வருவதை கூறவேண்டாம் என்பதை..

சென்னைக்கு சென்றவன் ஒரு ஹோட்டலில் தங்கி பிறகு 8 மணியளவில் ஏர்போர்ட்டிற்கு சென்றான்.

தன் கனவு ப்ராஜக்ட் ஒருபுறம் என்றாலும் தியாவை சந்திக்க போவது இன்னும் மகிழ்ச்சியை அதிகப்படுத்தியது.

தன் மொபைலை எடுத்தவன் "குட் மார்னிங் எனக்கு இன்றைக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு...நான் மொபைல் ஸ்விட்ச் ஆப் பண்ணி வெச்சுருப்பேன் நைட் பேசுறேன்" என்றவன் சிரித்துக் கொண்டே மொபைல் ஆப் செய்தான்.

சுமார் 12 மணிநேர டிராவலிற்கு பிறகு அபி பாரீஸ் வந்தடைந்தான்.

தியா இருக்கும் இடத்திற்கு ரீச் ஆனவன் அவளுக்கு அழைக்க
அவள் ஆச்சரியத்துடனே அட்டெண்ட் செய்து காதில் வைத்தாள்.

"ஹலோ"என்றவன் அவள் குரலைக் கேட்க அமைதியாக இருக்க

"ஹலோ மீட்டிங் நல்லபடியா முடிஞ்சுதா??சாப்பிட்டீங்களா??அத்தம்மா என்ன பண்ணுறாங்க??" என அவள் நிறுத்தாமல் கேட்டுக் கொண்டே போக

"சப்பா இவ குரலைக் கேட்கலானு பாத்தா அதை ரசிக்க விடாம சும்மா தொணத்தொணணு பேசிட்டே இருக்கா என முணுமுணுக்க

அது அவளுக்கும் கேட்டுவிட முகம் சிவந்தவள்

"ம்க்க்கும் " என செரும

"அங்கே ஏதோ சத்தம் கேட்கிற மாதிரி இருக்கே என்னனு பாரு??" என அபி கூற

விழிகள் பேசுதே💗(நிறைவுற்றது)Where stories live. Discover now