வெண்மதி வெண்மதியே நில்லு – நீ
வானுக்கா மேகத்துக்கா சொல்லு
வானம் தான் உன்னுடைய இஷ்டம் என்றால்
மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம் – உன்னை
இன்றோடு நான் மறப்பேனே நான் மறப்பேனே – உன்னாலே
நெஞ்சில் பூத்த காதல் மேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம்…திடீரென்று இந்த பாடல் ஒலிக்க
மனோவை மனதில் நினைத்துக் கொண்டே "ஆமா சார் உங்களுக்கு நிலா தான் வேணும்னா அப்படியே இருங்க எனக்கு என்ன நஷ்டம்?? நான் உங்களை மறந்துட்டு ஜாலியா இருப்பேன் ம்ம்ம்க்க்கும் அவன் முகத்தைப் பார்க்காமல் நிலாவைப் பார்த்துக் கொண்டு கூறியவள் அவனைத் திரும்பிப் பார்த்ததும் "எப்படி லாலிபாப் எப்படி உங்களை நான் மறப்பேன் அது நான் சாகுறவரை நடக்க வாய்ப்பே இல்லையே!!! உங்களுக்கு நிலா தான் வேணுமா??? இந்த மேஹா வேணாமா?? நான் என்ன பண்ணா உங்களுக்கு என்னைப் பிடிக்கும்??? " மனதில் நினைத்துக் கொண்டிருந்தவளுக்கு தன்னையும் அறியாமல் கண்களில் கண்ணீர் வர அதை அவனறியாமல் துடைத்துக் கொண்டாள்.கார் மனோவின் வீட்டினை அடைய
எங்கு தான் திரும்ப வர மாட்டோமோ என ஏங்கிய இடத்திற்கு வந்ததும் அவளையும் அறியாமல் மனது இதமானது.காரினை விட்டு இறங்கியவள் வாசல் வரை சென்று அங்கேயே நின்று விட்டாள்.
"ஏன் மேஹா உள்ளே போலயா??" என மனோ கேட்க
"வலது கால் எடுத்து உள்ள வரவா? இல்லை இடது
கால் வைச்சு வரவா?? இத இவர் கிட்ட கேட்டா கேவலமா ஒரு லுக் விடுவாரே வேணாம் மேஹா நீ இரண்டு கால் வெச்சு குதிச்சு உள்ளே போயிடு" என மனதில் நினைத்தவள் குதிக்க தயாராக"அங்கேயே நில்லுங்க "என அகிலா ஆராத்தி தட்டுடன் வெளியே வந்தார்.
"எதுக்கு மா இதெல்லாம் "என மனோ கேட்க.
"என் மருமக எவ்ளோ நாள் கழிச்சு வந்துருக்கா இரு டா" என ஆராத்தி சுத்தியவர் வலது கால் எடுத்து வெச்சு
உள்ளே போங்க எனக் கூற மேஹா திருத்திருவென முழிப்பதைப் பார்த்து இப்போ டவுட் கிளியரா எனக் கூறி புன்னகைத்துக் கொண்டே வெளியே சென்றார்.
YOU ARE READING
விழிகள் பேசுதே💗(நிறைவுற்றது)
Romanceஉன் கண்கள் என்னும் சிறையில் அடைப்பட்டேன் காதல் கைதியாக........ கைதியானவளின் காதலைக் காண்போம்......