வேண்டும்..உன் மடி மீது உறக்கம்
இதுதான் அன்பே நான் வேண்டும் சொர்க்கம்..
ஆஹா...து.. இதுபோல் வேறெந்த உறவும்..
நீ தான் உயிரே என் தாயின் வடிவம்..
கனவெல்லாம் நினைவாகி நீயானது..
உன்னால உன்னால நான் என்னை தொலைச்சேனே..
கண்ணால கண்ணால காதல் சிறையில் அடைஞ்சனேகாலம் அது நிற்காமல் ஓடிக் கொண்டிருக்க ஒருசமயத்தில் அவனின் ஓரப்பார்வைக்காக ஏங்கியவள் இன்று அவன் காதலில் திக்குமுக்காடிப் போனாள்.
கல்லூரி செல்ல வேண்டும் என்பதையே மறந்து மேஹாவின் பின்னாலேயே சுற்றிக் கொண்டிருந்தவனை திட்டி கலாய்த்து ஒன்றும் மாறததால் எப்படியோ போ என்று தண்ணீர் தெளித்து விட்டுவிட்டனர்.
மனோவைக் காதலுடன் பார்த்தவள்
அருகில் அழைக்க அந்த மேடிட்ட வயிறுடன் இருந்த அவனின் குண்டு தக்காளி தாய்மையின் பூரிப்பினால் இன்னும் சற்று எடை கூடியிருக்க உட்கார முடியாமல் சோபாவில் சாய்ந்து அமர்ந்திருப்பவளை பார்க்க தெவிட்டவில்லை அவனுக்கு.அவளருகில் சென்றவன் காலுக்கடியில் அமர்ந்து கொண்டு வீங்கிய அந்த பாதங்களை பதமாக பிடித்து விட அவன் தலை முடியை கலைத்தவள் திடீரென்று ஏற்பட்ட வலியால் முகம் சுருங்க உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று விட்டனர்.
அவனைப் பார்த்துக் கொண்டே உள்ளே அழைத்துச் சென்றவளுடன் தானும் போவதாக அடம் பிடித்தவனுக்கு சத்தியமாக அதில் விருப்பமில்லை இது அவனவளின் விருப்பம் மட்டுமே.
அவள் வலியில் துடிப்பதை தாங்க முடியாமல் தான் ஒரு ஆண் என்பதையும் மறந்து அழுத அந்த ஆண்மகன் அவர்களின் குழந்தைகளைக் கண்டு இப்போது ஆனந்தக் கண்ணீர் வடித்தான்.
ஆம் இரட்டைக் குழந்தைகள்
ஆண் அவனது குண்டுதக்காளி போலவும்
பெண் அவளது லாலிபாப் போலவும் இருக்க முதலில் அவன் கண்கள் பார்த்தது அவனின் மனையாளைத் தான்.அவள் கண்கள் மயக்கத்தில் சொருக அவனை அருகே அழைத்தவள்
"ஐ லவ் யூ லாலிபாப் " என்று கூற
இதுவரை அவளிடம் கெஞ்சி கொஞ்சி கேட்ட அந்த வார்த்தை இந்த நிமிடத்தில் கிடைக்கும் என அவன் நிச்சயமாக எதிர்ப்பார்க்கவில்லை.
YOU ARE READING
விழிகள் பேசுதே💗(நிறைவுற்றது)
Romanceஉன் கண்கள் என்னும் சிறையில் அடைப்பட்டேன் காதல் கைதியாக........ கைதியானவளின் காதலைக் காண்போம்......