கொஞ்சம் உன் காதலால்
என் இதயத்தை நீ துடிக்க வை
கொஞ்சும் உன் வார்த்தையால்
என் காதலை நீ மிதக்க செய்
என்னோடு நின்று கொள்ளடி
விலகி செல்ல வேண்டுமோ
என்னோடு சேர்ந்து செல்லடி
பிரிந்து போக வேண்டுமோ"அவர் நம்பரா?? என்கிட்ட இல்லையே"
"நிஜமாவா???"
"ம்ம்ம் என்றவள் எதுக்கு ?? எனக் கேட்க
"என் பிரெண்ட் அவரோட தான் போனாள் அதனால தான் கேட்கிறேன்"என்றவளிடம்
"ஓஓ ஓகே என்றவள் அப்போ அவர் வரமாட்டாரு போல நம்மலே கிளம்புவோம்"என நினைத்தவள் அவளிடம் கூறிக் கொண்டு வெளியே சென்றாள்.
மேஹா வெளியே சென்றதும் அவள் முன் பைக் வந்து நிற்க திடீரென்று வந்து நின்றதால் பயந்து கண் மூடிக் கொண்டவளை
"ஹலோ மேஹா அக்கா பயந்துட்டீங்களா?? "என அருண் கேட்க
மெதுவாக கண் திறந்து பார்த்தாள்.
விழிகள் ஆச்சரியத்தில் விரிய "ஹே அருண் எப்படி இருக்க??"
"சூப்பர் அக்கா அப்புறம் மனோ சார் கார் எடுக்க பார்க்கிங் போயிருக்காரு நீங்க தனியா இருப்பீங்க அதுனால உங்க கூட இருக்க சொன்னாரு"என அருண் கூற
"ஓஓஓஓ"என்றவள் அமைதியாகி விட்டாள்.
"ம்ம்ம்க்ககும் இது என்ன புதுசா அக்கறைலாம் நிலா கூட சீக்கிரம் சேத்துவைக்கணும்ல அதுனால தான் என்னை பத்திரமா பாத்துக்கிறாரு போல"என மனதில் நினைத்தவள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க
"மேஹாக்கா வா இது வாய் திறந்தா அது மூடாதே இப்போ வாயே திறக்க மாட்டிங்கிறீங்க??" என அருண் கேட்க
"ஹாஹா சும்மா ஒரு சேஞ்ச் வேணும்ல"
"நல்லாவே இல்லை கா"
"அப்படியா அப்போ இதான் எனக்கு நல்லா இருக்கு "
"அப்புறம் கா எப்போ என் லவ்க்கு ஓகே சொல்லுவீங்க???"
"என்னது"
"நீங்க தான் என் மாலா அக்கா"எனக் கூறி கண்ணடிக்க
YOU ARE READING
விழிகள் பேசுதே💗(நிறைவுற்றது)
Romanceஉன் கண்கள் என்னும் சிறையில் அடைப்பட்டேன் காதல் கைதியாக........ கைதியானவளின் காதலைக் காண்போம்......