பகுதி 49

5.5K 209 145
                                    

நீ நெருப்பு என்று தெரிந்த பின்னும்
உன்னைத் தொடத் துணிந்தேன் என்ன துணிச்சலடி
மணமகளாய் உன்னைப் பார்த்த பின்னும்
உன்னைச் சிறையெடுக்க மனம் துடிக்குதடி
மரபு வேலிக்குள் நீ இருக்க
மறக்க நினைக்கிறேன் முடியவில்லை
இமயமலை என்று தெரிந்த பின்னும்
எறும்பின் ஆசையோ அடங்கவில்லை
நீ வருவயோ? இல்லை மறைவாயோ? ஏ ஏ ஏ ஏ ஏ!
தன்னைத் தருவாயோ இல்லை கரைவாயோ

வாழ்க்கையில் பல போராட்டங்கள்,இன்னல்கள் சந்தித்து தன் வாழ்க்கை இப்படியே தான் இருக்குமா என வாழ்க்கையை வெறுக்கும் தருணம் அவளுள்ளும் அழகான காதல் பூத்து இறுதியில் அதை வேணாம் என முடிவு செய்து தூக்கி எறிந்த பின்னும் அவன் மேல் கொண்ட காதல் மாறவில்லை ,மறையவில்லை.

ஆனந்தியை வினு மண்டபத்திலிருத்து தன் வீட்டிற்கு அழைத்து சென்று விட்டான்...
இத்தனை நாள் ஏங்கிய அன்பு அவளுக்கு கிடைத்தும் அதை ஏற்கும் மனநிலையில் அவள் இல்லை...
அவளுக்கு ஒரு மாற்றம் கிடைக்கட்டும் என வினு ஆனந்தியை பாரீஸ் அழைத்துச் செல்ல ஏன் அங்கு சென்றோம் என ஆகிவிட்டது வினுவிற்கு.

வீட்டிலிருக்கும் வரை அவளுக்கு என்ன வேண்டும் என்றாலும் அவள் நாடுவது வினுவைத் தான். அவள் எந்தவொரு அன்பிற்கும் அடிமையாக விரும்பவில்லை ,நம்பவும் விரும்பவில்லை.

பாரீஸ் வந்து இரண்டு நாட்கள் ஆகியும் அவள் அவனுடன் பேச கூட முயற்சி செய்ய வில்லை.
மண்டபத்திலிருந்து வந்ததிலிருந்து அவள் சிரிக்க கூட முயற்சி செய்ய வில்லை.

இப்போது அபியை பார்த்த அடுத்த நொடி புன்னகைத்துக் கொண்டு அவனைப் பார்த்து ஓடியவளைக் கண்டு கோபம் தலைக்கேற நின்றிருந்தான் வினு.

அவனுக்கு அவன் ஆனந்தி தன்னால் மட்டுமே சிரிக்க வேண்டும், அவள் சிரிப்பிற்கு அவன் மட்டுமே காரணமாக இருக்க வேண்டும்.

ஏற்கனவே அவளை உயிராக நினைக்கும் அவனுக்கு அவள் வேறு ஒருவரை உயிராக நினைக்கிறாள் எனும் போதே அபியின் மேல் ஏற்பட்ட பொறாமை,கோபம் இப்போது அவள் சிரிக்க கூட அவன் தான் வேண்டுமா எனத் தோன்ற வெறிப்பிடித்தவன் போல் மாறிவிட்டான்.

விழிகள் பேசுதே💗(நிறைவுற்றது)Where stories live. Discover now