பகுதி 10

6.5K 276 452
                                    

அவன் மல்லிகை
உதடுகள் பிடிக்கும் அவன்
மார்பின் முடிகள் பிடிக்கும்
ஐயோ சந்தன நிறமோ
பிடிக்கும் கொஞ்சம்
சாய்கின்ற நடையும்
பிடிக்கும்
என் அவனுக்கு
மட்டும் யானை பலத்தில்
ஏழு மடங்காச்சே அவன்
ஒரு விரல் தீண்டி நொறுங்கிடவே
நான் உயிரை வளர்த்தேனே

கதிரவனின் செங்கதிர் பட்டு கண் விழித்தவள் தான் சோபாவில் இல்லாமல் மெத்தையில் இருப்பதைக் கண்டு "எப்படி தான் நைட் சோபாவிலும் காலைல மெத்தையிலும் இருக்கேனோ...ஒருவேளை தூக்கத்தில நடக்கிற வியாதியா இருக்குமோ???
ஆனாலும் நான் ஏன் தூக்கத்தில் மெத்தை மேலே படுக்கிறேன்???ஒருவேளை அவர் தூக்கிட்டு போயிருப்பாரோ??அதை நினைக்கும் போதே அவள் கன்னங்கள் சிவப்பாக....ச்சச்சசச அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை" என்றவள் தன்னவனைக் காணாமல் வெளியே சென்றாள்....

அவன் வெளியே சோபாவில் கைகளைக் குறுக்கி படுத்துக் கொண்டிருந்தான்.....

"அய்யோ லாலிபாப்....ஏண்டா நீ இவ்வளவு அழகா இருக்கே தூங்கும் போது கூட....ஒரு வேளை என் கண்ணுக்கு மட்டும் தான் நீ அழகா தெரியிரியோ??முதல்ல டாக்டர் கிட்ட கண்ணை செக் பண்ணணும்.....
பண்ணாலும் நோ யூஸ் தான்...நீ என் கண்ணுக்கு எப்பவும் அழகா தான் இருப்ப....அய்யோ என் கண்ணே பட்டுருச்சே...அவனுக்கு நெட்டி முறிக்க...அப்பப்பா என் லாலிபாப் மேல எவ்ளோ கண்ணு பட்டுருக்கு..."(உன்னோடது தான் டி முக்காவாசி...அவள் மைண்ட் வாய்ஸ் அவள் காலை வார)
ஈஈஈஈ....என்று இழித்தவள்
"ஹேப்பி மார்னிங் செல்லம்"என்று அவனுக்குக் கூறிவிட்டு எழுந்து கிட்சனிற்கு சென்றாள்...

இரவு தூங்க லேட் ஆனதால் தலைவலியுடன் எழுந்தவன்
முன் ஆவி பறக்க காபி இருக்க....
அதைக் கண்டவுடன் முகம் மலர்ந்தது.

தன் அறைக்கு சென்றவன் ப்ஃரஸ் ஆகிவிட்டு காபி குடிக்க ஆரம்பித்தான்.

அறைக்கு வந்தவள் கல்லூரிக்கு தயாராக ஆரம்பிக்க...
மெத்தையில் ஒருவன் இருக்கிறான் என்பதையே அறியாமல் அவள் பாட்டிற்கு அங்கும் இங்கும் சுத்திக் கொண்டிருந்தாள்.....

விழிகள் பேசுதே💗(நிறைவுற்றது)Where stories live. Discover now