கொஞ்சம் உன் காதலால்
என் இதயத்தை நீ துடிக்க வை
கொஞ்சும் உன் வார்த்தையால்
என் காதலை நீ மிதக்க செய்
என்னோடு நின்று கொள்ளடி
விலகி செல்ல வேண்டுமோ
என்னோடு சேர்ந்து செல்லடி
பிரிந்து போக வேண்டுமோகருமேகம் சூழ்ந்து இதோ தன் கண்ணீரை கன்னம் எனும் பூமியில் தெளித்து விட ஆவலாக இருக்கும் இனிய மாலைப் பொழுதில் அவனின் உள்ளம் கவர்ந்த குழந்தை,தோழி,காதலி,மனைவி என அனைத்துமாய் இருப்பவளை ரசித்துக் கொண்டே காரை ஓட்டிக் கொண்டிருந்தான்.
அவன் அவளை பார்ப்பது தெரிந்தும் அவனைக் கண்டுகொள்ளாது ஓரக்கண்ணால் அவனைப் பார்த்த படி வெளியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள் மனோவின் மேஹா.
"இப்போ இவரு எதுக்கு இப்படி பாக்குறாரு...லாலிபாப் இப்போ லாம் நீ சரி இல்லை இப்படி பாத்தா எப்படி தான் நார்மலா இருக்க முடியும் அய்யோ எனக்கும் வெட்கம்லாம் வருதே...நோ மேஹா உனக்குலாம் அது வரக்கூடாது "என மனதில் நினைத்தவள் "ஏதாவது பண்ணி அவரை டைவர்ட் பண்ணணுமே என நினைத்து பாட்டு கேட்க முடிவு செய்து ஆன் செய்தாள்.
ஓர கண்ணால என்ன ஓரம் காட்டுரா
ஜாட காட்டியே ரொம்ப வாட்டி வதைக்குரா
வான வில்லாட்டம் வந்து யெட்டி பாக்குரா
வலச்சு போட்டன் டா ஒரு சோக்கு figure-a டாஹாஹா என மனோ சத்தமாக சிரிக்க "எவனோ நம்ம பையன் தான் சிட்சுவேசன் சாங்க் போட்டு தூள் கிளப்புறாங்களே" எனக் கூற
அவனைப் பார்த்து முறைத்தவள் உடனே அதை ஆஃப் செய்தாள்.
அவன் இன்னும் சிரித்துக் கொண்டே இருக்க அவன் புன்னகையில் மெய் மறந்து நின்றாலும் உடனே சுதாரித்து அவனைப் பார்த்து முறைத்தாள்.
"ஆமா ஏன் அதிசயமா பார்ட்டி லாம்???"
"நீ வின் பண்ணிருக்க அதான்"
"பார்ரா நான் வின் பண்ணதுல அவ்ளோ ஹேப்பியா??"
"பின்ன இல்லையா....என் ஸ்வீட் அழகு பொண்டாட்டி வின் பண்ணிருக்கா"எனக் கூறி கண்ணடிக்க
YOU ARE READING
விழிகள் பேசுதே💗(நிறைவுற்றது)
Romanceஉன் கண்கள் என்னும் சிறையில் அடைப்பட்டேன் காதல் கைதியாக........ கைதியானவளின் காதலைக் காண்போம்......