31-பிரிவு

1K 44 0
                                    

பயம்,நடுக்கம்,வெட்க்கம்,கோவம் என்ற பல உணர்வுகளோடு நின்றிருந்த ஷ்ருதியை எந்த சத்தமும் இன்றி பார்த்திருந்த சிவா "இவன் யாருடி" என்று அந்த அந்நியனை காட்டி கேட்டான்.

தொங்க விட்டிருந்த தலையை மெதுவாக அவளது கணவனின்  பக்கம் திருப்பியவள் வெட்கி நின்றாள் 'வாட்?' என்று வாய் அசைப்பினோடு அந்த அந்நியன் பார்வையாலே எரித்தான்.  அவனது மனைவியை

"என்ன சிவா இது உன் ப்ரென்ட் எவ்ளோ நாள் கழிச்சி வந்து  இருக்கா நீ என்னடான்னா நல்லா பேசாம இப்டி பேசுற?" என்று கேட்ட அவளது தாய் இப்போது வரை அப்பாவியாக  தான் நின்றாள்.

உடனே எரிச்சலோடு "நீ கொஞ்சம் சும்மா இருக்கியா?" என்று ஒருமையில் கத்தி விட்டு வேகமாக ஷ்ருதியிடம் சென்றான். அவன் எவ்வளவு வேகமாக வந்தானோ அதை விட வேகமாக அவளது கணவன் அவளை மறைக்கும் விதம் வந்து நின்று "வட்டீஸ் யுவர் ப்ராப்லம் மேன் வைய் ஆர் யூ ஷவுடிங்?" என்று கேட்டான்.

உடனே "ஷ்ருதி  இவன ஒதுங்கிக்க சொல்லு இல்லேன்னா நான் இருக்குற கோவத்துக்கு அடிக்குற அடியில செத்துற போறான்" என்றதும் அவள் ஹிந்தியல் நடுக்கத்தோடு  'நீங்க கொஞ்சம் நகருங்க திவா இவர் எனக்கு தெரிஞ்சவர்' என்றாள். உடனே அவனூம் 'தெரிஞ்சவன்னா எப்படி தெரியும்' என்று கேட்டான் அவனது கேள்வியில் தலை குனிந்தவளிடம் "இப்போ உன் புருஷன் என்ன கேட்டான்" என்று கேட்டான் சிவா

கண்ணீரோடும் தயக்கத்தோடும் "தெரிஞ்சவர்ன்னா எப்படி தெரியும்ன்னு கேட்க்குறார்?" என்றாள்  கண்ணீரும் பயமுமாக

சிவா எதுவும் பேசாது மொபைலை ஆன் செய்து இருவரும் எடுத்த புகைப்படத்தை காட்டினான். அப்போது எல்லாம் ஸ்ருதி "ப்லீஸ் காமிக்காத ப்ளீஸ்'' என்று புலம்பி கொண்டு தான் இருந்தாள். அதை காதில் கூட வாங்காது காட்டியதும் அவளது கணவன் சிவாவின் கையிலிருந்து மொபைலை எடுத்து பார்க்க ஆரம்பித்து விடவும் "சொல்லு எதற்காக இப்டி பன்ன?" என்று கலங்கிய விழியோடு கேட்டான் அதில் கோவமும் கவலையும் நீயா நானா என்று போட்டி போட்டு கொண்டு இரூந்தது "சிவா ப்ளீஸ்" என்றாள் அவனை தலை குனிந்து நோக்கி "அடச்சி நடிக்காத ஷ்ருதி மறியாதயா சொல்லு நீ எதுக்கு என்ன ஏமாற்றின?" என்று கத்தினான்.

கல்லுக்குள் ஈரமா(முடிவுற்றது)Where stories live. Discover now