50

2.7K 74 57
                                    

தாராவின் பர்த்டே பார்ட்டிக்கு சிந்து குடும்பம் வந்து இருந்தது ஆனால் யாருமே சரத்துடன் பேசவில்லை... சரத்தும் தேவகியின் பின்னாடியும் முன்னாடியும் என்று சுற்றி சுற்றி தான் இருந்தான். ஆனால் தேவகி வீம்போடு அவனுக்கு எந்த ரெஸ்பொன்ஸும் செய்யாது இருந்து விட்டாள்.

சகிதாவை பற்றி சொல்லவும் வேண்டாம் அவள் பின்னாடி கூட வர வைத்து கொள்ளாது அலட்சியம் செய்து விட்டாள். சக்தியோ "சரத்" என்று ஒருமையில் தான் பேசினாள்.

பங்ஷன் மிகவும் பிரம்மாண்டமாக தான் நடந்தது. குறையே அற்ற ஒரு நிகழ்வு என்று சொல்லலாம்.... கிருஷ்ணா வந்து இறங்கின அந்த நொடியிலிருந்து அவரை வாய் மூடி நிற்கவே யாரும் இடம் கொடுக்கவில்லை அத்தனை பிஸி மனிதர்..... திருவும் வந்து இருந்தார். அவர் க்ரிஷ்ணாவை விட்டு நகரவே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

காரணம் ஐந்தாறு வருடம் முன்னாடி இறந்து விட்டதாக சொன்ன க்ருஷ்ணா திரும்பி வந்து நின்றார் என்பது அவருக்கு நெருக்கமானவர்களுக்கு தான் தெரியும் எவ்வளவு உணர்வு பூர்வமானது என்று

சிந்து தான் தந்தையை கட்டி கொண்டு அவரை விடாது அழுது தள்ளினாள்.

"நீ தான் என்ன விட்டு போயிட்டியே அப்பறம் நான் இருந்தா கூட நீ எங்க கூட இல்லயே ..." என்று மகளை திட்டாமல் வருத்தத்தை வெளிப்படுத்தினார்.

இன்னும் இறுக்கமாக கட்டி கொண்டு "நீ உயிரோட இல்லன்னு கேள்விப்பட்டப்ப எவ்ளோ அழுதேன் தெரியுமா..... கூட இல்லைன்னா கூட நீ நல்லா இருக்கனும்ப்பா" என்று விட்டு க்ருஷ்ணாவை நெற்றியில் முத்தமிட்டாள்.

"சரி சும்மா தான் சொன்னேன் வீட்ல போயி பேசிக்கலாம்" என்று விட்டு மற்றவர்களுடன் பேச ஆரம்பித்தார்.

பங்ஷன் முடிந்து அனைவரும் செல்லும் போதே சகிதா அஷ்வினுடன் சென்று விட்டாள். ஆனால் சிவா தேவகியிடம் "அத்தை நேராக எங்க வீட்டுக்கு போலாம் நாளைக்கு லஞ்சுக்கு அப்பறமாக நான் வீட்ல கூட்டி போயி விட்டுட்றேன்" என்று கூறி அவனது வீட்டுக்கு கூட்டி சென்றான்.

கல்லுக்குள் ஈரமா(முடிவுற்றது)Where stories live. Discover now