20-திக் திக்

1.5K 55 8
                                    

"அஷ்வின் கொஞ்சம் வீடு வரை வருவியா?" என்று பதற்றமாக கேட்ட சகியின் நிலை அறிந்தவன் "ஒன்பது மணிக்கு எனக்கு ஒரு ஆப்ரேஷன் இருக்கு இப்போ வந்தா எனக்கு எட்டு முப்பதுக்குள்ளாம் போயிட முடிஞ்ச விஷயமா இல்ல விஷயம் ஸீரியஸா?" என்று கேட்டான்

அஷ்வினின் பேச்சில் எந்த குறையும் இல்லை என்றாலும் கூட சகிதாவின் கண்கள் எனோ கலங்கி தான் போனது 'எங்களுக்குன்னு இந்த வீட்ல அண்ணாவோ அப்பாவோ இருந்து இருக்கலாம்' என்ற கவலை தான் அவளூக்கு பெற்றவராக இருந்து இருந்தாள் 'யோவ் ஆப்ரேஷனாவது மண்ணாங்கட்டியாவது போயி நம்ம மகள தேடு'ன்னு அம்மாவால சொல்லி இருக்கலாம் பட் அஷ்வின் நல்லவனாகவே இருந்தாளும் கூட அவனை டிஸ்டப் செய்யும் விதம் சக்திய காணலை என்று சொல்ல தேவையில்லயே என்று "அய்யோ என்ன அஷ்வின் இது ஆப்ரேஷன்னா நீங்க அதற்கு தயாராகுங்க"

"ஹேய் இப்போ ஏழு மணி கூட ஆகலைல ஸோ எதாவது தேவைன்னா சொல்லு" என்றான் மீண்டும் உரிமையாக "அட அப்டில்ல அஷ்வின் இது சும்மா தான் நீ ஆப்ரேஷன் முடிஞ்சி வா நாம பேசிக்கலாம்" என்றதும் "ஓஹ் ஒகே டேக் கெயார்" என்று விட்டு அழைப்பை துண்டித்தான். ஒரு பக்கம் தாயின் அழுகை மறு பக்கம் உதவ ஆள் இல்லா தனிமை என்று பல போராட்டங்களோடு இருந்த சகி முதலில் முகம் கழுகி ப்ரெஷ் ஆவோம் என்று வொஷ் ரூம் சென்று விட்டாள்.

அப்போது என்று சோகமாக வீட்டுக்குள் வந்தாள் சக்தி அவளை கண்டதும் தேவகி "ஹோ" என்ற கதறலோடு ஓடி சென்று கட்டி கொண்டு அழுதாள். கலைந்த தலை முடியும் அழுதூ வடித்த கண்களும் சிவந்த மூக்கும் என்று நின்று இருந்த மகளை ஒரூ முறை நன்றாக பார்த்ததும் வடிந்த கண்ணீரும் நின்று தான் போனது

சக்தியின் ஷோல்டரை தொட்டு "என்னாச்சி டா?" என்று சத்தம் கூட வராத முனுமுனுத்தலாக கேட்டாள் தேவகி "ம்மா" என்று விட்டு கட்டி கொண்டவள் ஹோ என்று அழுதாள்..... சக்தி அழுது விடவும் எதை பற்றியும் பேசாது அவளை குளித்து விட்டு வா என்று அனுப்பி வைத்தாள்.

சகி வொஷ் ரூமை விட்டு வந்ததும் வேகமாக ஓடி சென்ற தேவகி "சக்தி வந்துட்டா டா" என்றாள்
தலையை உயர்த்து எட்டி நோக்கி "எங்க அவ பளார்ன்னு ஒன்னு வெச்சீங்களா இல்லயா?" என்று கத்தி கொண்டே முன்னோக்கி செல்ல போனவளை தடுத்து "ச்சே சும்மா இரு அவளே நொந்து போயி வந்து இருக்கா விசாரிப்போம் அதற்கு அப்பறமா அடிக்கலாம்" என்று விடவும் எதுவும் பேசாது மவுனமாக இருந்து விட்டாள் சகி குளித்து விட்டு மகள் வரும் முன்பே சட்னி அறைத்து தோசையும் சுட்டு மேசை மேல் வைத்து விட்டாள். சக்தி வந்து டைனிங் டேபிலில் அமர்ந்ததும் சகிதாவும் அமர்ந்து கொண்டாள் தேவகி மகளிடம் எதுவும் பேசாது இருந்தாள் ஆனால் சகி கேள்வி கேட்க்க ஆரம்பித்தாள் "நேற்று போனது இன்னைக்கு வந்து இருக்க நாங்களா கேட்க்கும் வரை மேடம் வாய் திறந்து பதில் சொல்ல மாட்டீங்க போல..." என்று குத்தலாக பேசவும் "நீ சும்மா இரு சகி நீ சொல்லூ சக்தி?" என்று மூற்றவளை தடுத்து இரண்டாவது மகளிடம் பக்குவமாக பேசினாள்.

கல்லுக்குள் ஈரமா(முடிவுற்றது)Where stories live. Discover now