21-

1.6K 59 6
                                    

கொஞ்சம் அதிர்ச்சியோடு "ஹாய் சார் எப்போ வந்தீங்க அதுவும் டைனிங் ஹால் வரை" என்று கேட்டு விட்டு தேவகியை நோக்கினாள். அதை கவனிக்காது வேகமாக தேவகி கிச்சனுள் சென்று விடவும் சக்தி சிவாவை நோக்கி "தாராவ கூட்டி வந்து இருக்கலாமே சார்" என்று சொன்னதும் புன்னகைப்போடு "தாரா வந்தத நீங்க கூட கவனிக்கலையா?" என்று கேட்டு விட்டு சட்டென்று எழுந்து வாசல் வரை சென்றான். அவன் பின்னாடியே சக்தியும் சென்று தேடினாள். தாரா எந்த ஊசலும் இன்றி சுவரில் மாட்டியிருந்த புகைப்படங்களை பார்த்து கொண்டு இருந்தாள்.

"தாரா" என்று சக்தி கூவியதுமே "அக்கா...." என்று கத்திக்கொண்டு ஓடி வந்து நெஞ்சோடு சாய்ந்து கொண்டாள்.

"காலைல இவ்ளோ நேரம் தூங்கினீங்களா க்கா?" என்று தாரா கேட்டதும் "இல்லடா நான் ரூம் க்ளீன் பன்னிட்டு இருந்தேன் நீங்க வந்து ரொம்ப நேரம் ஆயிறுச்சா?" என்று கேட்டதும் தலையை ஆட்டி விட்டு "இதுலாம் யாருக்கா?" என்று மாட்டியிருந்த போட்டோக்கலை காட்டி கேட்டாள். அதற்குள் அவ்விடம் வந்த தேவகி "நான் காமிக்குறேன் நீங்க பேசிட்டு இருங்க" என்று கூறி சிவா சக்திக்கான ஸ்பேஸை கொடுத்து விட்டு தாராவை கூட்டி சென்றாள்.

தாயின் இந்த செய்கைக்கு அர்த்தம் புரியாதவள் சிவாவை நோக்கி "எனி திங் ஸீரியஸ்?" என்று கேட்டாள். அவள் அப்படி கேட்க்க காரணம் இரவு கொடுத்த பென்ரைவ் தான்.

உடனே புன்னகைப்போடு "நோ நோ" என்று விட்டு "ப்ரைவஸியான இடம் ஏதாவது இருக்கா இங்க?" என்று கேட்டான். உடனே வீட்டுக்கு வெளியே மரங்களுக்கு அருகில் கூட்டி சென்று "இது ஒகேவா சார்" என்று கேட்டாள்.

ஒரு தடவை சுற்றி பார்த்து விட்டு "யா கம்பேர்ட்டா இருக்கு" என்றான். "அப்போ பேசலாமே" என்றாள் சஸ்பன்ஸ் தாங்காது. அவள் பட்டென்று கேட்டாள் என்பதற்காக தன்னால் அப்படி சொல்ல முடியாது என்ற தயக்கத்தில் ஒரு நிமிஷம் அமைதியாக நின்றவன் சட்டென்று "வில் யூ மேரீ மீ?" என்று கேட்டான். அவன் அப்படி கேட்டதுமே கண்களை சுருக்கி அவனை ஆழமாக பார்த்து "புரியலை" என்றாள்.

கல்லுக்குள் ஈரமா(முடிவுற்றது)Where stories live. Discover now