44-குற்றமா என் காதல்

1.1K 45 3
                                    

டயரியை மூடி வைத்த சக்தி வேகமாக பத்மாவிடம் சென்று "அப்போ அந்த ஷ்ருதி ஜயில்லயா?" என்று கேட்டாள்  யோசனையோடு "ஹம்" என்று மட்டுமே சொன்னாள் பத்மா

"ஏன் பத்மாம்மா ஷ்ருதி இவ்ளோ மோசமான ஆள் தானா....?" என்று கேட்டதும் கையிலிருந்த வேலையை விட்டு விட்டு சக்தியின் பக்கம் திரும்பி "நிஜமாகவே நான் அவ கூட இருக்கும் வரை அவ இப்படி பட்டவள்ன்வு எனக்கு தோன்றினதே இல்ல ம்மா நல்ல பொண்ணா தான்ம்மா இருந்தா... அவ தம்பிய ஏமாற்றினப்போல இருந்து அவ பற்றி கேள்வி பட்ட எதுவுமே சரியில்ல"

"ஹம் பாவம்ல சிவா.." என்று விட்டு பத்மாவை பார்க்கவும் "என்ன பன்றது தம்பிக்கு வந்த சோதனை அப்படி பட்டது.... நீயாவது தம்பிய நல்லா பார்த்துக்கோமா...." என்றாள் அவள் ஷோல்டரில் கைவைத்து

அதற்குள் கிச்சன் வரை வந்து நின்றான் சிவா.... பின்னாடியே தாராவும..... உடனே  "தாரா" என்று கூவலோடு சிவாவை தாண்டி கொண்டு தாராவின் கை பிடித்து கூட்டி சென்றாள்.

அறைக்குள் சென்றதுமே "அக்கா நான் ட்ரஸ் மாற்றிட்டு வர்றேன்க்கா...." என்று கூறி சக்தியை அனுப்பி வைக்கவும் திரும்ப கிச்சன் வந்தவள் பத்மாவிடம் "எல்லாம் ஆச்சாக்கா?" என்று கேட்டாள்

"ஆமாம்மா ஏன் பசிக்குதா?"

"இல்லக்கா சும்மா தான்" என்று விட்டு சிவாவின் அறைக்கு சென்று கதவை தட்டினாள் அவன் திறந்த கையோடு  "சாப்பாடு எடுக்கட்டுமாங்க?" என்று தான் கேட்டாள்.

அவள் கொஞ்சம் நர்வஸாக இருப்பதை நன்றாகவே அவதானித்து விட்ட சிவா "கறி கீழ சிந்தாம எடுத்து வை" என்று விட்டு கதவை மூடி கொள்ளவும் 'இது என்ன கறி கீழே சிந்த விட நான் என்ன சின்ன குழந்தையா... இல்ல வேலை செய்ய தெரியாதவள்ன்னு சொல்லாம சொல்றாரா...

நான் வீ்ட்டில் வேலை செய்கிறேன் தானே... அம்மாவை செய்ய விட்டு வேடிக்கை பார்ப்பவள் என்று நினைத்து விட்டார் போலும் 

கட்டினவளை நன்றாக அவதானித்தால் தானே தெரியும் அவள் வேலை செய்ய தெரிந்தவளா இல்லையா என்று....

கல்லுக்குள் ஈரமா(முடிவுற்றது)Where stories live. Discover now