💚 இணை 13

862 47 12
                                    

சபாபதியின் அண்ணன் மகனது நிச்சயதார்த்த விழாவில் அனைவரும் மகிழ்ச்சியான மனநிலையில் அங்கும் இங்குமாக உலவிக் கொண்டிருந்தனர்.

தன் அம்மம்மா தன்னை வீட்டிலேயே விட்டு வந்தாலும், தான் எப்படியோ இந்த சுபநிகழ்வுக்கு வந்து சேர்ந்து விட்டோம் என்ற நிம்மதியில் இருந்தாள் சாம்பவி. செல்வாவும் அவள் கூடவே அவள் செல்லும் இடங்களுக்கு எல்லாம் சென்று அந்த மண்டபத்தில் கூட்டம் அதிகமாக இல்லாத ஒரு இடத்தில் சாம்பவிக்கு நேர் பின்னால் அமர்ந்து கொண்டு அவ்வப்போது அவளது நடவடிக்கைகளை கண்காணித்துக் கொண்டிருந்தான். தனது அம்மம்மாவின் அருகில் சென்று அவரை ஒட்டி அமர்ந்து கொண்ட சாம்பவியிடம் அடிக்குரலில்,

"ஒன்ன யாரு இங்க வரச்சொன்னா பவிம்மா..... எதுக்காக இங்க வந்த? சாப்பாடு வேணும்னா எப்பவும் போல வீட்ல உனக்கு மட்டும் வேலை செய்றவன்ட்டயே கேட்டு சாப்ட்ருக்க வேண்டியதுதான?" என்று கல்யாணி பேச சாம்பவியின் கண்களில் நீர் கட்டிக் கொண்டு கீழே விழவா என்ற படி நின்றது.

ஏதோ இந்த விழாவிற்கே அவள் சாப்பாட்டிற்காக தான் வந்தது போல இதென்ன தரம் குறைந்த பேச்சு என்று தன் அம்மம்மாவிடம் அவள் வாயைத் திறக்கும் முன் செல்வா சாம்பவிக்கு அடுத்தது போலாக போட்டிருந்த ஒரு இருக்கையில் வந்து அமர்ந்து கொண்டான்.

"ஏஆயா.... உம்பொண்ணுதா ரொம்ப வருசத்துக்கு முன்னால எவம்பின்னாலயோ ஓடிடுச்சே? அத்த யாரும் ஒன்னாண்ட இப்ப கேட்டுக்குட மாட்டாங்க? கொஞ்சங்கூட வெக்கமே இல்லாத பவியோட நைனா வூட்டு வொறவுகாரங்க விசேசத்துக்கோசரம் வந்துக்கினியே? இங்க மொய் எழுதவாச்சு துட்டு வச்சுனு இருக்கியா? இல்ல டமாரமாச்சு வச்சுனு இருக்குதா? மவ ஓடிப்போற அளவுக்கு அவள கொடுமைப்படுத்திட்டான் பாவிப்பயன்னு மூக்கால அழுது மருமவன கிழிச்சு தோரணமா தொங்க வுட்டுக்குவாங்களாம். அப்பால அவனோட அண்ணாத்த வூட்டு விசேசத்துக்கும் வந்து மூக்குப் புடிக்க ஒரு வெட்டு வெட்டிக்குவாங்களாம். சோக்கா இருக்குதுல்ல பவி இவுங்களோட நாயம்.....!" என்று கல்யாணியின் முகம் கருத்துப் போகும் அளவிற்குப் பேசிக் கொண்டே போன செல்வாவின் கையில் சுரண்டி அவனை பேசாமல் இரு என்று வாயில் விரல் வைத்துக் காட்டினாள் சாம்பவி.

இளையவளோ என் இணை இவளோ✔Where stories live. Discover now