💚 இணை 37

869 47 3
                                    

"நான் அம்மா கூடவே இருக்கணும்; அதுனால எனக்கு இப்ப கல்யாணம் வேணாம்!" என்றவளை "ஆரம்பிச்சுட்டா!" என்ற பாவத்துடன் பார்த்த செல்வா,

"ஒன்னாண்ட யாரும் அம்மாவ பாக்கக்கூடாதுன்னு சொல்லி, பூட்டு போட்டு வக்கலியே கண்ணு? நெதம் ஆஸ்பத்திரில இருந்து வந்ததுக்கு பின்னால நாலு மணி நேரம் கூட ஒங்கம்மாவோட இரு; இதெல்லாம் ஒரு பிரச்சனையா?" என்று அவளிடம் கேட்டான்.

"இல்ல..... அதெல்லாம் பத்தாது.
அம்மா எனக்காக இன்னொரு பேபியே பெத்துக்க கூடாதுன்னு முடிவு பண்ணி, நிறைய ஸாக்ரிஃபைஸ் பண்ணியிருக்காங்க. அதுனால நானும் யாரையுமே கல்யாணம் பண்ணிக்காம அப்பா, அம்மாவோடயே இருக்கப்போறேன்!" என்று சொன்னவளின் முன் திடீரென தன்னுடைய கையை நீட்டினான் செல்வா.

"எதுக்கு இப்ப நீ கை நீட்டுற?" என்று குழப்பத்தில் கேட்டவளிடம்,

"வா! கையப் புடிச்சுட்டு ரெண்டு பேரும் கீழ போவோம்! போயி உங்கம்மாவாண்ட நீ சொல்ற காரணத்த சொல்லி யாரையுமே கல்யாணம் பண்ணிக்காம உங்களோட இருக்கப்போறேன்னு இந்தப் பைத்தியம் சொல்லுது. அதுக்கு உங்களுக்கும் சம்மதமான்னு கேட்டு வருவோம்; வா!" என்று கையைக் கட்டிக் கொண்டு உறுதியான குரலில் சொன்னவனிடம்,

"ம்ப்ச்; எப்பவுமே நீ இப்டிதான்...... நீ என்ன சொல்றியோ, அத என்னை கேக்க வச்சுடுவ! நமக்குள்ள வந்தது ஜஸ்ட் ப்ரெண்ட்ஷிப் தான்; அது பர்ஸ்ட் லவ் கிடையாது! ஸோ நாம அத பெரிசா எடுத்துக்குறதுக்கு ஒரு அவசியமும் இல்ல!" என்று சொன்னவளை எங்கே கைநீட்டி விடுவோமோ என்று செல்வாவிற்கு பயமாக இருந்தது.

செல்லச் சீண்டல்கள், குறும்புப் பேச்சு, ரகசிய முதல் முத்தம் என அவன் எண்ணிக் கொண்டு வந்ததென்ன......? தன் முயற்சியில் சற்றும் மனந்தளராத விக்ரமாதித்தன் வேதாளத்தின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல தயாரானான் என்று இப்போது அவளுக்கு ஒரு பதில் சொல்லும் நிலையில் இருப்பதென்ன? என்று நினைத்தவனுக்கு அவளது சிறுபிள்ளைத்தனமான நிறைய தர்க்கங்கள் இப்போதும் நினைவிற்கு வந்து லேசாய் சிரித்துக் கொண்டான்.

இளையவளோ என் இணை இவளோ✔Where stories live. Discover now