💚 இணை 16

720 42 6
                                    

இரவு பத்து மணியளவில் சபாபதி தன்னுடைய ட்யூட்டி முடித்து ஹோமிலிருந்து வீட்டுக்குக் கிளம்பிக் கொண்டிருந்தார். அடுத்த இரு நாட்களுக்கு சிக் லீவ் போட்டிருந்தார்! செல்வா கேட்ட கேள்வியில் அவரது குற்ற உணர்வு தலைவிரித்து ஆடிக் கொண்டிருந்தது. தகிக்கும் அவரது மூளைக்கு ஒரு ரிலாக்ஸேஷன் வேண்டும்; அது எங்கு கிடைக்கும் என்றும் அவருக்கு நன்றாக தெரியும்! தன்னுடைய பைக்கை அடுத்துக் கொண்டு கிளம்பியவர் போரூர் ஏரியாவிலிருந்த சுபகிரி நகர் பகுதியை நோக்கி தன்னுடைய வண்டியை செலுத்திக் கொண்டிருந்தார்.

தான் தேடி வந்த வீட்டை நெருங்க நெருங்க சபாபதிக்குள் "இந்தா வந்துட்டோம்! இனிமே எல்லாம் சரியாகிடும்!" என்ற எண்ணம் வந்து கொண்டே இருந்தது.

சந்துக்குள் நுழைந்து பைக்கை செலுத்தியவர், ஒரு வீட்டின் முன்னால் சென்று அழைப்பு மணியை அழுத்தினார்.

இரண்டு நிமிடங்களில் கதவைத் திறந்த பெண்மணி சபாபதியை பார்த்ததும் முகம் மலர்ந்து அவரை அணைத்துக் கொண்டார்.

"இந்த வாரம் நீங்க இங்க வரமாட்டீங்களோன்னு நினைச்சேன் சபா! இன்னிக்கு தான உங்க அண்ணனோட பையனுக்கு நிச்சயதார்த்தம்னு சொல்லிட்டு இருந்தீங்க? அங்க போயிட்டு வந்தீங்களா? பவி எப்டி இருக்கா? இஸ் ஷீ ஹேப்பி நௌ?" என்று ஒவ்வொரு கேள்வியாக அவரிடம் கேட்டபடியே அவருக்கான தண்ணீர் மற்றும் இரவு உடையை எடுத்துக் கொடுத்து விட்டு அவரது சிறிய பேகை பெட்ரூமுக்குள் சென்று வைத்து விட்டு வந்தார்.

தனது கேள்வி எதற்கும் பதில் சொல்லாமல் சபாபதி இறுகி அமர்ந்திருந்ததை பார்த்து விட்டு அவரருகில் சென்று அமர்ந்து கொண்டவர் அவரிடம்,

"என்னாச்சு! இஸ் எவ்ரிதிங் ஆல்ரைட்?" என்று கேட்டார்.

"நோ ரேணு..... நத்திங் இஸ் ரைட் இன் மை ஃபேட்! வாழ்க்க பூரா நான் இப்டி கில்ட்டி கான்ஸியென்ஸ்லயே கெடந்து செத்துப் போயிடுவேன் போலிருக்கு! அப்போ வித்யா என்னோட வொய்ப் தான? ஸோ அவள நான் லவ் பண்ணுனதுல எந்தத் தப்பும் இல்லையே? அவளுக்கு என்னைப் பிடிக்காம வீட்ல இருந்து கெளம்பிப் போனப்ப கூட இவர் கூட வாழப் பிடிக்கல, ஜீவனாம்சமா எதுவும் வேண்டாங்குறது உட்பட
தெளிவா எல்லாத்தையும் எழுதி வச்சுட்டுத் தான போயிருந்தா! நமக்கு இவ்ளோ அசிங்கத்த குடுத்துட்டு போயிட்டாளே ஒருத்தின்னு நெனச்சு நெனச்சு நாலஞ்சு வருஷம் ரோபோ மாதிரி வேலைய மட்டும் பார்த்துட்டு அலைஞ்சது என்னோட தப்பா? இல்ல.... அவளோட அப்பாவும், அம்மாவும் என்னமோ தப்பு முழுசும் அவமேல தான்னு சொல்லி எங்கால்ல விழுந்து அழுதப்ப அவங்களுக்காக பரிதாபப்பட்டு பவிய அவங்க கையில குடுத்து வளக்க சொன்னது தான் தப்பா? பாட்டி, தாத்தான்னா பாசமா இருப்பாங்க; எங்குழந்தைக்கு அவங்களோட பாசமாவது கெடக்கட்டும்னு நினைச்சேன். பட் ஐ'ம் ராங்! எனக்கு வித்யாவை பத்தியோ, அவளோட பேரெண்ட்ஸ பத்தியோ, இல்ல என்னோட பொண்ணப் பத்தியோ ஒண்ணுமே தெரியல...... ஐ'ம் அ கம்ப்ளீட் லூஸர் ரேணு!" என்று கலங்கிய விழிகளுடன் தன் முகத்தைப் பார்த்துப் பேசியவரின் தலையை தன் தோளில் சாய்த்து அவருடைய கைகளை வருடிக் கொண்டிருந்தார் ரேணுகா.

இளையவளோ என் இணை இவளோ✔Where stories live. Discover now