💚 இணை 29

690 50 5
                                    

பவியை சமாதானம் செய்து செல்வா வீட்டிற்கு அழைத்து வந்திருந்த அந்த ஞாயிறு இரவு உணவு அந்த வீட்டில் இருந்த நால்வருக்கும் தனித்தனியாக நடந்தது. முதலில் செல்வா பவியை கட்டாயப்படுத்தி சாப்பிட அழைத்து வந்ததும் அவள் பெயருக்கு கொஞ்சம் கொறித்து விட்டு அவளறைக்குள் முடங்கிக் கொள்ள, பின் சபாபதி ரேணுகாவை சாப்பிட அழைத்துச் சென்று அவர் உணவு உண்டு முடித்ததும், அவரிடம் சற்று நேரம் பேசி விட்டு கீழே உள்ள ஒரு படுக்கை அறையில் அவரை தங்கிக் கொள்ள சொல்லி விட்டு சற்று தயங்கிய படி அவரது லக்கேஜ்களை அந்த அறைக்குள் அன்பேக் செய்ய தன் மனைவிக்கு உதவிக் கொண்டிருந்தார்.

"சபா..... எதுக்காக உங்களுக்கு இவ்ளோ தயக்கம்? நாம இவ்ளோ வருஷமா தனியா தான இருந்தோம்? நான் சொன்ன மாதிரி பவியோட ஹெல்பராவே நான் அறிமுகம் ஆகியிருந்தா இந்த ரூம்ல தானே இருந்துருக்கணும்? இதுக்கு எதுக்கு நீங்க இவ்ளோ யோசிக்குறீங்க?" என்று கேட்ட தன் மனைவியின் கையைப் பற்றி அவர் தோள் வளைவில் சாய்ந்து கொண்டார் சபாபதி.

"உனக்கான ரெஹக்னிஷன கடைசி வரைக்கும் நான் உனக்கு குடுக்காமலேயே போயிடுவனா ரேணு?" என்று கேட்டு வருந்தியவரிடம்,

"அதெல்லாம் இல்ல சபா! சீக்கிரத்துல நாம மூணு பேரும் ஒரே பேமிலியாகிடுவோம் பாருங்களேன்!" என்று நம்பிக்கை வார்த்தைகளை பேசி தெம்பூட்டினார் ரேணுகா.

"கூடிய சீக்கிரத்துல எல்லாம் சரியாகிடும்னு நம்புவோம் ரேணு; பவி நம்மள புரிஞ்சுக்கிட்டு அக்செப்ட் பண்ணிக்குற வரைக்கும் தான்....... அதுவரைக்கும் நீ கொஞ்சம் வெயிட் பண்ணு;
நான் போயி படுக்கட்டுமாம்மா?" என்று சபா கேட்க ரேணு சபாபதியின் வயிற்றை தொட்டுக் காட்டி தன் கணவரிடம்,

"சாப்ட்டுட்டு போய் படுங்க! வெறும் வயித்துல படுத்தா உங்களால கண்டிப்பா தூங்க முடியாது! நாளைக்கு மார்னிங் நான் அந்த பையனோட சேர்ந்து ப்ரேக்பாஸ்ட்டுக்கு ஹெல்ப் பண்ணட்டுமா? இல்ல நானே சமைக்கட்டுமா?" என்று கேட்டார். தன் மனைவியின் நெற்றியில் முத்தமிட்ட சபாபதி,

இளையவளோ என் இணை இவளோ✔Where stories live. Discover now