💚 இணை 33

705 46 1
                                    

அன்று இரவு செல்வா ஜெயராஜ், மனோகர், வினோத், எழில் நால்வரையும் அவர்களது "இன்முக விருந்தோம்பல்" உணவுவிடுதியில் அசெம்பிள் செய்திருந்தான். இந்த உணவகம் தான் அவர்கள் வாங்கிய முதல் சொத்து. இந்த எட்டு வருட காலத்தில் அவர்களது விஷயத்தில் வளர்ச்சி எளிதாக ஒன்றும் கிடைத்து விடவில்லை.

முதலாவதாக செல்வா தன்னுடைய நண்பர்கள் நால்வருடன் எந்த ஒரு முடிவெடுத்தாலும் அதற்காக அவர்களிடம் போராட வேண்டியிருந்தது. எழிலும், வினோத்தும் தான் செல்வா சொல்லும் விஷயங்களை அப்படியே ஏற்றுக் கொள்பவர்கள்! ஜெயராஜூம், மனோகரும் அவன் என்ன சொன்னாலும், அதில் நான்கு கருத்துக்களை கூடக் குறைய சொல்லி மறுத்து, சேர்த்து தான் பின் ஒரு முடிவுக்கு வருவார்கள்.

நண்பர்கள் ஐவரும் சேர்ந்து சின்னதாக முதல் போட்டு வாடகையில் ஆரம்பித்த கடையை ஒரு தரமான உணவகமாக, அவர்களின் சொந்த இடமாக மாற்றவே இரண்டு வருடங்கள் ஆகியது அவர்களுக்கு! அதற்குள் செல்வா அனைவரையும் அரைத்து படி, படி என்று குச்சியை வைத்துக் கொண்டு அவர்கள் பின்னாலேயே விரட்டியதில் ஒருவழியாக நண்பர்கள் ஐவரும் பத்தாவதும், பனிரெண்டாவதும் ப்ரைவேட்டில் முடித்திருந்தனர்.

என்ன தான் கையில் தொழில் இருந்தாலும் ஒரு அடிப்படை தகுதியை கல்வி தான் நமக்குத் தருகிறது என்பதை செல்வா இந்த இரண்டு வருடங்களில் அனுபவப்பூர்வமாகவே உணர்ந்து கொண்டான்.

"டேய் ஒலக்க..... இப்பயாவது எங்கள உட்டுருடா..... ஒன்க்கு புண்ணியமாப் போவும்!" என்று கதறிய நால்வரையும் முடியாது என்பது போல் தலையாட்டி ஜெயராஜ் மற்றும் மனோகரை ஒருவருட கேட்டரிங் டிப்ளமாவிலும், எழில் மற்றும் வினோத்தை மூன்று வருட ஆட்டோமொபைல் டிப்ளமாவிலும் சேர்த்து விட்டான். தனக்கு வணிகவியவில் விருப்பம் இருந்ததால் பிபிஎம் கோர்ஸில் சேர்ந்து அடுத்த மூன்று வருடங்களில் ஒன்றிரண்டு அரியர்களுடன் கோர்ஸை ஓரளவு வெற்றிகரமாகவே முடித்து விட்டான்.

ஜெயராஜ், மனோகர் இருவரும்
அவர்களுடைய கேட்டரிங் டிப்ளமாவை முடிக்கும் வரை அவர்களுக்கும், அவர்களுடைய குடும்பத்தினருக்கும் தேவையான பணத்தை செல்வா, வினோத், எழில் மூவரும் சம்பாதித்து தந்தனர். அதற்கடுத்த வருடத்தில் செல்வா ஈவ்னிங் காலேஜிலும், வினோத், எழில் அவர்களுடைய ஆட்டோமொபைல் டிப்ளமாவிலும் சேர மூவரும் ஒன்றாகவே அவர்களுடைய கோர்ஸ்களை நிறைவு செய்தனர்.

இளையவளோ என் இணை இவளோ✔Où les histoires vivent. Découvrez maintenant