💚 இணை 28

703 49 19
                                    

செல்வாவும், சாம்பவியும் கோயம்பேடு ஏரியாவில் இருக்கும் CMBT யில் அமர்ந்திருந்தனர். அவளது பையை அவள் கையில் தராமல் தாய்க்குரங்கு தன் குட்டியை மடியில் கட்டிக் கொள்வது போல தன் மடியில் கட்டிக் கொண்டு அமர்ந்திருந்தான் செல்வா.

எங்கே அவனிடம் சொல்லாமல் கொள்ளாமல் எந்த பேருந்திலாவது ஏறி விடுவாளோ என்ற பயம் அவனுக்கு. ஆனால் அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என பாவம் செல்வாவிற்கு இதுவரை தெரிந்திருக்கவில்லை.

அவனது பேச்சைக் காதிலேயே வாங்கிக் கொள்ளாமல் ஆறாத கோபத்துடன் தன்னுடைய ஏரியாவிலிருந்து புறப்பட்டு கோயம்பேடு வரை வந்திருந்தாள் சாம்பவி.  தெருமுனையில் அவள் ஆட்டோவில் ஏறுவதற்கு முன்பாக ஓடிச்சென்று அவளை வழிமறித்து நிறுத்தியவன்,

"நான் இல்லாம எங்க கெளம்புற பாப்பா? என்னியும் ஒங்கூட கூட்டிட்டுப் போ!" என்றான். இரண்டு நிமிடங்கள் யோசித்தவள், அவனையும் தன்னுடன் ஏற்றிக் கொண்டு கிளம்பி விட்டாள்.

அவளுக்கு இப்போது எங்கேயாவது தூரமாக தொலைந்து போய் விட வேண்டும் என்ற எண்ணம்! ஆனால் வீட்டிலிருந்து புறப்பட்டு ஏதாவது தெரியாத ஊருக்கு சென்று அங்கே தொலைந்து போவதற்குள், இங்கு சென்னையிலேயே தொலைந்து போய் விடக்கூடாது அல்லவா...... அதற்காக தான் அவனை துணைக்கு கூட்டிக் கொண்டு சென்றாள். பஸ்ஸில் ஏறியதும் அவனை வீட்டிற்கு செல்லும்படி திருப்பி அனுப்பி விட வேண்டியதுதான்...... அதற்கு மேல் இவன் இங்கேயே இருக்கிறானோ இல்லை வேறு எங்காவது செல்கிறானோ அது அவனுடைய பாடு என்று யோசித்து வைத்திருந்தவள், சென்னை மொஃபஸல் பஸ் டெர்மினஸை வந்தடைந்தாள்.

அப்பா, தாத்தா, அம்மம்மாவுடன் இல்லாமல் இதுவரை சாம்பவி தனியாக எங்குமே சென்றதில்லை. அவர்களுடனே கூட நிறைய பயணித்தது இல்லை! அதனால் தனியாக பயணம் செய்வதற்கு பயந்து கொண்டு தான் செல்வாவையும் தன்னுடன் அழைத்து வந்தாள். இங்கு பெருந்திரளான மக்களின் கூட்டமும், சலசலப்பும், ஏதோ ஒரு வேகத்தில் பயணத்துக்காக அவர்கள் இங்கும் அங்குமாக ஓடுவதையும் அமைதியாக அமர்ந்து ரசித்துக் கொண்டிருந்தாள்.

இளையவளோ என் இணை இவளோ✔Where stories live. Discover now