💚 இணை 32

719 50 14
                                    

அன்று தீபக் தன்னுடைய தங்கைக்கு ஒரு நல்ல திருமணப் பரிசு தருவதற்காக "Little Foots" பெட்ஷாப்புக்கு அவளை அழைத்து வந்திருந்தான்.

"டேய் தீபக்..... இந்த ஷாப்ல டாக்ஸ், கேட்ஸ், ராபிட்ஸ், லவ் பேர்ட்ஸ், ஃபின்ஜஸ், பேரட்ஸ்ல காக்டெய்ல், மக்காவ், ஹாம்ஸ்டர் இப்டி எல்லா வெரைட்டியும் கிடைக்கும் தெரியுமா? கீழ ஷாப், மேல வெட் க்ளினிக்னு ஒரே இடத்துல நம்ம பெட்ஸ வாங்கிக்கவும் செய்யலாம்! அதுங்களுக்கு வாக்ஷினேஷன், ஹெல்த் இஷ்யூஸ் இதையும் சரி பண்ணிக்கலாம்...... வசந்த் கிட்ட எனக்கு ஒரு பப்பி வாங்கிக்குடுன்னு கேட்டேன்டா; ஆனா அவன் நான் ஆசையா கேட்டத கண்டுக்க கூட மாட்டேங்குறான்டா! நீ எனக்கு ஒரு பொமரேனியன் பப்பி வாங்கிக்குடு! அப்போ தான் அண்ணி வயித்துக்குள்ள இருக்குற உன்னோட பேபி வெளிய வந்ததும் அதப்பாக்க நான் ப்ரான்ஸூக்கு வருவேன். இல்லன்னா அங்க வர மாட்டேன் பாத்துக்க!" என்று சொன்ன தன் தங்கையின் தலையில் குட்டிய தீபக் அவளிடம்,

"ஏய் வாயாடி! பப்பி வேணும்னா அண்ணா எனக்கு பப்பி வேணும்னு கேட்டு அதோட நிப்பாட்டுறி! அதென்ன உனக்கு பெட் வாங்கித்தந்தா தான் என் பேபிய பாக்க வருவேன்னு ப்ளாக்மெயில் பண்றது? நீ ஒண்ணும் என் ப்ளேஸ்க்கு வரவே வேண்டாம்! நான் உனக்கு இங்க எதுவும் வாங்கித்தர மாட்டேன்; வா போலாம்!" என்று உறுதியாக சொல்லி தன் தங்கையை கையைப்பிடித்து அழைத்துச் சென்ற தீபக்கின் கை யாராலோ பின்புறமிருந்து இழுத்து நிறுத்தப்பட்டது.

"தீபக் ப்ரோ..... என்ன நம்ம கடைக்கு வந்துட்டு நம்ம செல்லங்கள்ல ஒருத்தரக் கூட வாங்காம போறீங்க? பாலிவுட் ஆக்டர் மாதிரி மொளுமொளுன்னு இருக்கீங்களே ப்ரோ...... எத்தன வருஷம் ஆச்சு உங்கள பாத்து? எப்டி இருக்கீங்க? என்ன பண்றீங்க?" என்று புன்சிரிப்புடன் வினவியவனை தீபக்கும், திவ்யாவும் ஒருநிமிடம் யோசிப்புடன் பார்த்துவிட்டு சட்டென முகம் மலர்ந்தனர்.

"நீ செல்வா தான......?" என்று சற்றே சந்தேகமாக கேட்ட தீபக்கிடம்,

"உனக்கு என்ன கண்ணு தெரியலயா? இது அவரே தான்டா அண்ணா...... சாம் அக்காவோட கஸின்; நீங்க தானன்னா அவரு? அ.......ப்பா! என்ன ஒரு சேன்ஜ்ஓவர் உங்க கிட்ட? இது உங்க ஷாப்பா அண்ணா? எனக்கு ஒரு பொமரேனியன் பப்பி வேணும். தர்றீங்களா?" என்று கேட்ட திவ்யா
சிறுபெண்ணாக தன் பிறந்தநாள் கேக் உடைந்து விட்டது என்று அழுதது நினைவிற்கு வந்தது செல்வாவுக்கு. இப்போது எவ்வளவு வளர்ந்து ஆளே மாறி விட்டாள்! இதே மாதிரி தான் என் மைமாவும் ஆளே மாறியிருப்பாளோ என்று எண்ணம் யாவும் அவன் மனதிற்குள்ளாக இருக்கும் கன்னியிடம் செல்ல திவ்யாவை பார்த்துக் கொண்டிருந்தான் வாகை செல்வன்.

இளையவளோ என் இணை இவளோ✔Where stories live. Discover now