💚 இணை 15

752 46 6
                                    

ஜெயராஜ், மனோகரன், எழிலரசன்,
வினோத்குமார், வாகை செல்வன் ஆகிய ஐந்து பேரும் எப்போதிருந்து
ஒன்றாக சேர்ந்தார்களோ தெரியாது. ஆனால் ஐந்து பேரும் ஹோட்டலில் வேலை செய்யும் பொழுது நல்ல கோஆர்டினேஷனில் வேலை செய்பவர்கள்; ஒருவன் புரோட்டாவுக்கு மாவு பிசைந்தான் என்றால், அடுத்தவன் குட்டி உருண்டைகளை உருட்ட தயாராகியிருப்பான். இரவில் ஒருவன் கடைக்கு மாப் போட்டுக் கொண்டிருந்தான் என்றால் மற்றவர்கள் சேரை டேபிளின் மேல் அழகாக நிற்க வைத்து விட்டு ஐவரும் உறங்கும் நேரத்தை சற்று துரிதமாக்கி விடுவார்கள். அந்த உணவகத்தில் மிகவும் கடினமான உடல் உழைப்பும் நண்பர்கள் சிரித்து, அரட்டையடித்துக் கொண்டே செய்வதில் ரொம்பவும் கடினமான வேலையாக தெரியாமல் போய் விடும் அவர்களுக்கு! அதிலும் செல்வா தன்னுடைய மற்ற நான்கு நண்பர்களையும் கண்காணித்து கொண்டே இருப்பதில் மோப்பநாயைப் போன்றவன்! தார்க்குச்சியை வைத்துக் கொண்டு பின்னால் குத்திக் கொண்டே இருக்கவில்லை என்றால், தன் போக்கில் போகும் இயல்புடையவர்கள் அவனது நண்பர்கள்!

மனோ, ராஜு இருவரும் திருட்டு தம்மிற்காக எங்காவது பதுங்கினார்கள் என்றால் அவர்களை கிடுக்கிப்பிடியிட்டு பிடித்து நைத்து உறித்து விடுவான். தன் நண்பர்கள் மேல் எந்த அளவிற்கு பாசக்காரனோ, அந்த அளவிற்கு உரிமையும் எடுத்துக் கொண்டு வெளுத்து விடுவான். முதலாளி தன்னுடைய பைக்கை வீட்டில் கொண்டு போய் விடு என்று அவனிடம் சொல்லி விட்டு வெளியூருக்கு சென்றார் என்றால் அந்நேரம் மட்டும் தனியாக பைக்கில் சுற்றித் திரிந்த குற்றத்துக்காக இப்போது போல் நால்வராலும் சேர்ந்து ஏதாவது ஒரு எண்ணெய் டின்னை நோக்கி தூக்கி வீசப்படுவான்! மொத்தத்தில் அவர்கள் ஐவருக்குள்ளும் வந்த முதல் பிரிவு செல்வா ஹோமுக்கு சென்ற போது ஏற்பட்ட பிரிவு தான்! சபாபதியின் வீட்டிற்கு சென்ற போது ஏற்பட்டிருந்தது இரண்டாவது தடவையாக ஏற்பட்ட பிரிவு!

"மாமூ..... பதினெட்டு முடிஞ்சவுடனே மொத வேலையா லைசென்ஸ் எடுத்துக்கினு, பாஸ்போட்டும் வாங்குறோம்டா! ஏதாவது ஒரு அரபு நாட்டுல போயி சொகமா குளுகுளுன்னு ஏசி கார ஓட்டணும்டா! ஏசி வீடு, ஏசி காரு, ஏசி குளிப்புரூம்புன்னு அப்டியே அங்க இருக்குற ஷேக்குங்க மாதிரியே நாமளும் வாழணும்! நீ இன்னா சொல்ற ஒலக்க?" என்று தன் திட்டத்தை சொல்லி நண்பனின் அபிப்ராயம் கேட்ட எழிலிடம் புன்னகைத்த செல்வா,

இளையவளோ என் இணை இவளோ✔Where stories live. Discover now