காலைக் கதிரவன் இருளை அகற்றிவிட்டு ஒய்யாரமாக வானத்தில் அமர்ந்து மிளிர்ந்து கொண்டிருந்த வேலையில் தன் தேவதையின் நினைவுகளோடு அவள் புகைப்படத்தை பார்த்துக்கொண்டு இருந்தான் ஜெய்
ஜெய் POV:
" நீ என்னோட இருந்த வரைக்கும்
உனக்கு நான் கஷ்டத்தை மட்டும்தான் குடுத்துருக்கேன். உன்ன புரிஞ்சுக்கவே
இல்ல டி. நீ என்னோட தேவதை டி நான் எப்படி உன்ன கஷ்டப்படுத்துனேனு தெரியல. எங்கடி என்ன விட்டு போன?நீ இல்லாம செத்துரலாம் போல இருக்குடி. நீ இல்லாத வாழ்க்கைய என்னால நெனைச்சிக்கூட பாக்க முடியாது. கண்டிப்பா உன்ன தேடி கண்டுபிடிப்பேன். ஏன்னா நீ எனக்கு சொந்தமானவ.
உன்ன கண்டுபிடிச்சதுக்கு அப்புறமா நான் பண்ண தப்புக்கு நீ என்ன தண்டனை குடுத்தாலும் நான் தாராளமா ஏத்துக்குவேன்.உன்ன திருப்பி என் வாழ்க்கையவிட்டு போக விடமாட்டேன்.
ஐ லவ் யூ சோ மச் டி."னு நான் கலைய பத்தி யோசிச்சிட்டே உக்காந்து இருந்தேன்....
அப்போ என் ஃபோன் அடிக்குற சத்தம் கேட்டுச்சு.....நான் எடுத்து பேசுனேன்...முக்கியமான மீட்டிங் இன்னைக்கு இருக்குதுன்னு என்னோட பீ.ஏ சொன்னாங்க....நான் வரேன்னு சொல்லிட்டு ஃபோன் வச்சிட்டு ஆஃபீஸ்கு ரெடியாகலான்னு
எந்திருச்சு போனேன்...கிளம்பிட்டு நான் கீழ் போனேன்....அம்மா அங்க டேபுள்ல சாப்பாடு எடுத்து வச்சிட்டு இருந்தாங்க.....நான் அவுங்க பக்கத்துல போனேன்....அவுங்க என்னைய பாத்துட்டு சிரிச்சாங்க.....
"என்ன ஜெய் சீக்கிரம் கிளம்பிட்ட இன்னைக்கு..."னு கேட்டாங்க
"ஆமா...மா இன்னைக்கு நிறைய முக்கியமான மீட்டிங் இருக்கு.....காலையிலதான் பீ.ஏ ஃபோன் பன்னி சொன்னாங்க....அதான் கொஞ்சம் சீக்கிரம் கிளம்புரேன் மா...."
" ஓ....அப்புடியா....அப்போ நீ வந்து சாப்புட்டு சீக்கிரம் கிளம்பு...வா..உக்காரு."னு அம்மா சொன்னாங்க
YOU ARE READING
காதல் ♥️♥️♥️ (Completed)
Romanceநான் எதை வேணாலும் மன்னிப்பேன் ஆனா என்கூடவே இருந்துட்டே எனக்கு நம்பிக்கை துரோகம் பன்ற யாரையும் நான் மன்னிக்கவே மாட்டேன்.....அது யாரா இருந்தாலும் சரி..... அந்த நேரத்துல எல்லா சாட்சியும் அவளுக்கு எதிராவே இருந்துச்சு....மத்தவங்க சொல்றத கேட்டு அவள தப்பா...