CHAPTER 28

6.4K 205 48
                                    

Kalai pov:
     
     நான் அம்மாவும் அண்ணாவும் சொன்ன எல்லாத்தையும் அமைதியா கேட்டுட்டு உக்காந்து இருந்தேன்.என்னோட அம்மா நிறைய கஷ்டபட்ருக்காங்க.
அவுங்க அனுபவிச்ச வலி எல்லாத்தையும் கேட்டப்போ எனக்கு என்னைய அறியாமலே அதுக்கு காரணமானவன் மேல கோவம் வந்துச்சு.
என் அம்மாவ இந்த அளவுக்கு ஆக்குனவனுக்கு கண்டிப்பா நான் பதிலடி கொடுப்பேன். என்னோட அம்மா அனுபவிச்சத விட அதிகமா அவனுக்கு வலியவும் வேதனையும் கொடுப்பேன்.

அதுக்கு மொதல்ல அவன் யாருன்னு நான் தெரிஞ்சுக்கனும்.அப்போதான் அவன் இப்போ எங்க இருக்குறான் என்ன பன்றான்னு நான் தெரிஞ்சுக்க முடியும்னு யோசிச்சிட்டே அவன் எப்புடி இருப்பான்னு அண்ணாக்கிட்ட கேட்டேன்.

"அண்ணா நம்ம அம்மாவ கொன்னவன் எப்புடி இருப்பான்னு நான் பாக்கனும்.அவன் யாரு எங்க இருக்குறான்னு உனக்கு தெரியுமான்னு கேட்டேன்."

நான் அந்த ஆள் பத்தி கேட்ட உடனே அண்ணா  எந்த ரியாகஷனும் தரல அமைதியா இருந்தான்.

"அண்ணா நான் உன்கிட்டதான் கேட்குறேன் அமைதியா இருக்காம எதாவது வாய திறந்து பேசு."னு சொன்னேன்.

"அவன் ஃபோட்டோ இல்லமா.அவன் இப்போ என்ன பன்றான் எங்க இருக்கான்னு எனக்கு தெரியாது டா அதை பத்தி நான் தெரிஞ்சுக்கவும் விரும்பல.எனக்கு தேவ ஒன்னே ஒன்னுதான் உன்கூட,லஷ்மி அம்மா,ராஜசேகர் அப்பா எல்லாருக்கூடவும்  கடைசி வரைக்கும் நான் சந்தோஷமா இருக்கனும்.அது மட்டும்தான் என்னைக்கும் நான் விரும்புறது."னு சொன்னான்.

நானும் அதுக்கப்புறம் அவன கட்டாயப்படுத்துல.இப்போ இதை பத்தி அவன்கிட்ட கேட்குறது வேஸ்டுன்னு புரிஞ்சிக்கிட்டேன்.அண்ணா சொல்லலன்னா என்ன நானே கண்டுபுடிக்குறேன்.அதுக்கப்புறம் இருக்குது அந்த ஆளுக்குன்னு எனக்குள்ளையே பேசிட்டு இருந்தேன்.

அப்போ ஜெய் டக்குன்னு விஷ்ணுஅண்ணாவ பாத்து

"நீ மாறமாட்டன்னு நினைச்சேன் மச்சான் ஆனா அது தப்புன்னு இப்போ புரிஞ்சுக்கிட்டேன்.உன்கிட்ட இருந்து இப்புடி ஒரு வார்த்தைய நான் எதிர்பாக்கல"னு ரொம்ப கோவமா பேசிட்டு சோஃபால்ல இருந்து எந்திருச்சான்.

காதல் ♥️♥️♥️ (Completed)Where stories live. Discover now