CHAPTER 25

6.6K 195 28
                                    


Vishnu POV:
   முக்கியமான ஒரு விஷயம் உங்க ரெண்டு பேருட்டையும் பேசனும்.ஆனா இன்னைக்கு நான் பெங்களூர் கிளம்புறேன் அதுனால நீங்களும் அங்க வாங்க நான் என்ன விஷயம்னு சொல்றேன்னு எங்கக்கிட்ட சொன்னா.

நாங்களும் பெங்களூர் கிளம்பி போயிட்டோம்.நாங்க போன அன்னைக்கு நைட்டே கலையும் ஜெய்யும் சண்டை போட்டுக்கிட்டாங்க.
நானும் அர்ஜுனும் எதுவுமே பேசல.நாங்க வந்தது ஜெய்க்கு புடிக்கல அதுனாலதான் சண்டைனு நாங்க புரிஞ்சுக்கிட்டோம்.நாங்க வந்த உடனே கிளம்பிருப்போம் பட் கலை ஃபீல் பன்னக்கூடாதுனு அங்கையே இருந்துட்டோம்.

ஹஸ்பண்ட் அன்ட் வைஃப் சண்டையில நாங்க எதுவும் சொல்லக்கூடாதுன்னு நாங்க ரெண்டு பேரும் எதுவும் சொல்லல.

என் தங்கச்சியை ஏமாத்திட்டான்னு எனக்கு ஜெய் மேல வெறுப்பு இருந்துச்சு.ஆனா சூழ்நிலைதான் ஒரு மனுஷன தப்பு பன்ன வைக்குது.

அதுனால கலையே எறங்கி வந்து அவனுக்கு திருந்த வாய்ப்பு கொடுக்கும்போது அப்புறம் நான் அவன பழிவாங்குவேன்னு சொல்றதுல அர்த்தம் இல்லைனு தோனுச்சு.

அதோட என் தங்கச்சி இன்னும் அவன் மேல அன்பா தான் இருக்குறா கோபத்துல அதை ஒத்துக்க மாட்றான்னு புரிஞ்சுக்கிட்டேன்.

கலை அன்னைக்கு மயக்கம் போட்டு விழுந்தப்போ அவன் கண்ணுல பதட்டத்தையும் கண்ணீரையும் பாத்தேன்.
அப்போ முடிவு பன்னேன் என் தங்கச்சியை இவன விட நல்லா யாரும் பாத்துக்க முடியாதுன்னு.
அதுல இருந்து அவன நான் என்னோட எதிரியாவோ இல்லை வெறுப்போடவோ பாக்குறத நிறுத்திட்டேன்.

அன்னைக்கு நைட்டு நல்லபடியா போச்சு.இப்ப கலை மூட் அவுட்ல இருக்குறா அதுனால அடுத்த நாள் காலையில எதுக்காக கலை எங்கள வர சொன்னான்னு கேட்டுக்கலான்னு நானும் அஜ்ஜுவும் விட்டுட்டோம்.

அடுத்த நாள் காலையில நானும் அஜ்ஜுவும் சீக்கிரம் எந்திருச்சுட்டோம். கலை இன்னும் எந்திருச்சிருக்க மாட்டா அதுனால அவள டிஸ்டர்ப் பன்ன வேண்டாம் நம்மளே போய் காஃபி போடலான்னு நானும் அஜ்ஜுவும் கிச்சனுக்கு போனோம்.

காதல் ♥️♥️♥️ (Completed)Where stories live. Discover now