Kalai pov:
காலையில ஃபோன் அடிக்குற சத்தம் கேட்டுச்சு.நான் மெதுவா எந்திரிச்சு எடுத்து பாத்தா அம்மாக்கிட்ட இருந்து கால்.உடனே அட்டண்ட் பன்னி பேசுனேன்.
"ஹலோ மா .""ஹலோ கலை ஹேப்பி அணிவர்ஸரி."
"தேங்க்ஸ் மா.நேத்து எப்போ சென்னை போனிங்க."
"நாங்க நேத்து நைட்டே ரீச் ஆகிட்டோம்.உங்க ரெண்டு பேரையும் அங்க தனியா விட்டுட்டு வந்துட்டோம்.என்ன பன்றிங்களோனு கேட்கதான் கால் பன்னேன்."
"அதெல்லாம் ஒன்னும் இல்லை ரெண்டு பேரும் நல்லாதான் இருக்குறோம்."
"ஜெய் உன்னோட ஹஸ்பண்ட் கலை. கொஞ்சமாவது மரியாத கொடுக்கனும் . அவன் இவன்லான் சொன்னா உன் மாமியார் என்ன நினைப்பாங்க."
"மா அம்மா எப்பவுமே என் கட்சிதான்.அவுங்க எதுவும் சொல்ல மாட்டாங்க."
"சரி என்னம்மோ பன்னு.ரெண்டு பசங்களும் உன்கிட்ட பேசனுமா என்னைய பின்னாடி இருந்து ஃபோன் குடுக்க சொல்லி நச்சரிக்கிரானுங்க நான் அவனுங்க கிட்ட குடுக்குறேன் பேசு."னு அம்மா சொன்னாங்க.நான் அவுங்கள ஃபோன் குடுக்க சொன்னேன்.
"ஹேப்பி அணிவர்ஸரி அம்மு."னு ரெண்டு பேரும் ஃபோன்ல கத்துனாங்க.
"ப்பா... ஏன்டா ரெண்டு பேரும் இப்புடி கத்துறிங்க காது போச்சு."
"ஈஈ...ஒரு எக்சைட்மெண்ட்ல கத்திட்டோம் அம்மு."னு அஜ்ஜு சொன்னான்.
"என் அணிவர்ஸரிக்கு நீங்க ஏன்டா எக்சைட் ஆகுறிங்க நான்தான ஆகனும்.சரி எனக்கு நிறைய வேலை இருக்கு நான் உங்களுக்கு அப்றோம் கால் பன்றேன் பாய்..."
"புருஷன் வந்த உடனே எங்கள கழட்டி விடுறியா உன்ன அப்புறம் கவனிச்சிக்குறோம்.பாய்..."
அப்புறம் ஜெய் அம்மா அப்பா ரேஷ்மி எல்லாருகிட்டையும் வரிசையா ஃபோன் பன்னாங்க எல்லார்கிட்டையும் பேசி முடிச்சிட்டு திரும்புனேன்.ஜெய் நல்லா தூங்கிட்டு இருந்தான்.அப்போதான் நேத்து நைட்டு கிட்சன்ல நடந்தது ஞாபகம் வந்துச்சு
YOU ARE READING
காதல் ♥️♥️♥️ (Completed)
Romanceநான் எதை வேணாலும் மன்னிப்பேன் ஆனா என்கூடவே இருந்துட்டே எனக்கு நம்பிக்கை துரோகம் பன்ற யாரையும் நான் மன்னிக்கவே மாட்டேன்.....அது யாரா இருந்தாலும் சரி..... அந்த நேரத்துல எல்லா சாட்சியும் அவளுக்கு எதிராவே இருந்துச்சு....மத்தவங்க சொல்றத கேட்டு அவள தப்பா...