CHAPTER 20

6.9K 198 29
                                    


Jai POV:

எனக்கு அவ கடைசியா ஒரு சேன்ஸ் கொடுத்துருக்கான்றத நம்பவே முடியல.எதோ கணவுல இருக்குற மாதிரி இருந்துச்சு.ஆனா அவ ஏன் அந்த வீட்டுக்கு போகனும்னு சொன்னானு மட்டும் எனக்கு புரியவே இல்லை.....அவ போனதுக்கு அப்புறம் அந்த வீட்டுக்கு நான் போறதையே நிறுத்திட்டேன்....அந்த வீட்டுல தான் கலை என்னைய கடைசியா விட்டுட்டு் போனா....அந்த வீட்டுல நிறைய கசப்பான விஷ்யங்கள் நடந்துருக்கு.....எது எப்புடியோ நான் இந்த சேன்ஸ மிஸ் பன்ன விரும்பல.

அதுக்கு முன்னாடி என்னோட அம்மா அப்பா கிட்ட நான் கலைய அங்க தனியா கூட்டிட்டு போய் தங்க போறேன்னு சொல்லனும்.
அவுங்க ஏன் எதுக்குனு ஆயிரத்து எட்டு கேள்வி கேட்பாங்க.
அதுமட்டும் இல்லாம அவள நான் தனியா கூட்டிட்டு போரது அவ அப்பா ஹிட்லர்கு தெரிஞ்சா என்னைய உண்டு இல்லனு ஆக்கிடுவாரு.
எல்லாரையும் எப்புடி சமாலிக்கப்போரேன்னு தெரியல.என்ன பன்றது என்ன காரணம் சொல்லலாம்னு யோசிச்சிட்டே ஹால்ல அங்கையும் இங்கையும் நடந்துட்டு இருந்தேன்.அப்போ அம்மா அங்க வந்தாங்க.

"டேய் அவ ரூம்ல போய் அவக்கூட இருக்க போறேன்னு சொல்லிட்டு போன....நீ அங்க போனதுக்கு அவ என்னடா சொன்னா...."

"மா அதை எல்லாம் விடுங்க.இப்போ நான் ஒன்னு உங்கக்கிட்ட சொல்லுவேன். நீங்க ஏன் எதுக்குனு காரணம் கேட்காம எனக்கு ஹெல்ப் பன்னனும்."

"மொதல்ல விஷ்யத்தை சொல்லுடா.சும்மா பில்ட் அப் கொடுத்துட்டு."

"அம்மா அதுவந்து....... அதை எப்புடி சொல்றதுன்னு தெரியலை மா."

"இப்ப நீ சொல்றியா இல்ல நான் போகட்டுமா.எனக்கு நிறைய வேலை இருக்கு"னு அம்மா சொன்னாங்க...

"இல்லை வெய்ட்.....நான் சொல்றேன்....
மா நான் கலைய பெங்களூர்ல இருக்குற நம்ம ஃபலாட்கு கூட்டிட்டு போறேன் மா....நீங்க யாரும் கூட வரக்கூடாது....நானும் அவளும் தனியாதான் அங்க இருக்கப் போறோம்."

காதல் ♥️♥️♥️ (Completed)Where stories live. Discover now