CHAPTER 15

7.1K 212 36
                                    

Innaiku adada ennai edho seigirai from movie Santosh subramaniam.

Njoyyy frndzzzzz

💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖

ஜெய் POV:

எங்கம்மாக்கு எப்பவும் ஓவரா பெர்ஃபாமென்ஸ் பன்னியே பழக்கமா போச்சு.இப்பவும் அப்புடியே பன்னி காரியத்தையே கெடுத்துருவாங்க போல இருக்கே.

"கலை உனக்கு எந்த ரூம் பிடிக்குதோ அங்க நீ இருந்துக்கோ.கெஸ்ட் ரூம் கூட ரெடியா தான் இருக்குது"னு சொன்னாங்க.

நான் என்னோட அம்மாவ மொரச்சி பாத்துட்டே இருந்தேன்.
இவ கண்டிப்பா என் ரூம்ல இருக்குறேன்னு சொல்லமாட்டா.
போச்சு ஜெய் எல்லாம் போச்சுனு நினைச்சிட்டு இருந்தேன்.

"அம்மா நான் இதுக்கு முன்னாடி இந்த வீட்டுல எந்த ரூம்ல இருந்தேனோ அங்க தான் இருக்கப்போறேன் மா"னு சொன்னா.

எனக்கு ஒரு நிமிஷம் ஷாக்கா இருந்தது.என்னால நம்பவே முடியலை. இப்புடி ஒரு பதில் சொல்லுவான்னு நான் நினைக்கலை.நான் ஈஈன்னு பல்ல காமிச்சிட்டே அவள பாத்துட்டு இருந்தேன்.

"கலை நீ ஜெய் ரூம்ல இருக்கப் போறியா.யோசிச்சுதான் சொல்றியா."னு அம்மா கேட்டாங்க.

இவளே சரின்னு சொன்னாலும் இவுங்க விடமாட்டாங்க போலன்னு நினைச்சிட்டே நான் பேச ஆரம்பிச்சேன்.

"அம்மா அவதான் என்னோட ரூம்ல இருக்குறேன்னு சொல்றால ஏன் திரும்பி திரும்பி அவள கேட்டுட்டே இருக்குறிங்க."னு சொன்னேன்.

இதை சொல்லி முடிக்கவும் அம்மாவும் கலையும் என்னைய மொறச்சாங்க.
சரி இதுக்குமேல பேசுனா அசிங்கப் படுத்துவானுங்கனு நான் அமைதியா இருந்துட்டேன்.
அதுக்கப்புறம் கலை பேச ஆரம்பிச்சா.

"அம்மா நான் அந்த ரூம்ல இருக்குறேன்னு தான் சொன்னேன் பட் உங்க பையன் கூட சேந்து இருக்குறேன்னு சொல்ல ல."

காதல் ♥️♥️♥️ (Completed)Where stories live. Discover now