CHAPTER 22

6.7K 201 51
                                    

Kalai POV:

ஜெய் கதவ திறந்த உடனே அவுங்க ரெண்டு பேரையும் பாத்துட்டு மொறச்சான்.

அங்க விஷ்ணுவும் அர்ஜூனும் ஈஈ னு பல்ல காமிச்சிட்டே ஹாய் னு சொன்னாங்க.நானும் அவுங்கள பாத்து சிரிச்சுட்டே ஹாய்னு சொன்னேன்.

"கலை இவுங்க இங்க என்ன பன்றாங்க
.... நீ தான் வர சொன்னியா"

"ஆமா நான்தான் வர சொன்னேன்."

"எதுக்கு..."

"எதுக்குன்னா எனக்குத் தோனிச்சு வர சொன்னேன்."

"என்கிட்ட நீ சொல்லவே இல்லை."

"மொதல்ல அவுங்கள உள்ள விடு அதுக்கப்புறம் நான் உன்னோட கேள்வி எல்லாத்துக்கும் பதில் சொல்றேன்."

அவுங்க ரெண்டு பேருக்கும் உள்ள வர வழிய விட்டான்.

"உன்கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டு பெர்மிஷன் வாங்கிட்டு பன்னனும்னு அவசியம் இல்லை....எனக்கு தோன்றத நான் பன்னுவேன்....அது உனக்கு புடிச்சாலும் சரி புடிக்கலனாலும் சரி அதை பத்தி எனக்கு கவலை இல்லை."னு சொன்னேன்

நான் இப்புடி சொன்னதும் அவனுக்கு கோவம் வந்துடுச்சு அது நல்லாவே அவன் முகத்துல தெரிஞ்சுது.

"நீ என்கிட்ட பெர்மிஷன் கேட்கனும்னு நான் சொல்லல....அட்லிஸ்ட் என்கிட்ட இவுங்க வராங்கன்னு சொல்லிருக்கலான்னு தான் நான் சொல்றேன்."னு சொனான்

"அதான் இப்போ தெரிஞ்சிருச்சுல்ல அப்ரோம் எதுக்கு இதை பெரிய பிரச்சனையாக்குற.... ."னு சொன்னேன்

அதுக்கப்புறம் அவன் எதுவும் பேசல...அமைதியா சோஃபால போய் உக்காந்துட்டான்....நான் அவன கண்டுக்காம அஜ்ஜுகிட்டையும் விஷ்ணு அண்ணாக்கிட்டையும் பேசிட்டு இருந்தேன்....

"ஏன்டா எங்களுக்கு முன்னாடியே கெழம்பிட்டோம்னு ஃபோன் பன்னிங்க நாங்களே வந்துட்டோம் ஏன்டா இவ்வளோ லேட்டு."

காதல் ♥️♥️♥️ (Completed)Where stories live. Discover now