CHAPTER 35

6.1K 198 63
                                    

Jai pov:

    அதுக்கப்புறம் நான் அவள ஹாஸ்பிட்டல்ல இருந்து வீட்டுக்கு கூட்டிட்டு போனேன்.
அவ ரொம்ப அமைதியா இருந்தா.அழுகல எதுவும் பன்னல.

கார்ல இருந்து அவளால எறங்கி நடக்கமுடியாம நடந்துட்டு இருந்தா.நான் அவள டக்குனு தூக்கிட்டு போய் ரூம்ல படுக்க வச்சேன்.அவளுக்கு சாப்டறதுக்கு ரெடி பன்னிட்டு அவளுக்கு சாப்ட குடுத்தேன்.

"கலை சாப்புடு..."

"எனக்கு பசிக்கல...நான் அப்புறம் சாப்டுக்குறேன்.."னு சொன்னா

"இப்பவே லேட் ஆச்சு அப்புறம் எப்ப சாப்டுவ...மொதல்ல சாப்டு."னு சொல்லிட்டு ஊட்டி விட்டேன்.

மொதல்ல வேண்டாம்னு சாப்டமாட்டேன்னு சொன்னா.அப்புறம் நான் வர்புறுத்தி ஊட்டி விட்டேன்..அதுக்கப்புறம் அவளுக்கு மாத்திரை குடுத்துட்டு தூங்க சொன்னேன்...

அவ பெட்ல இருந்து எந்திருச்சா.

"கலை எதுக்கு எந்திரிக்குற."னு கேட்டேன்.

"படுக்க போறேன்."னு சொன்னா

அப்பதான் அவள கீழப்படுக்க சொன்னது ஞாபகத்துக்கு வந்துச்சு.

டக்குன்னு அவக் கைய புடிச்சு நிறுத்துனேன்..அவ என்னைய பாத்தா

"பெட்லையே படு கீழ படுக்க வேண்டாம்."னு சொன்னேன்

அவ எதுவும் பேசாம அமைதியா படுத்துட்டா..கொஞ்ச நேரத்துல தூங்கிட்டா.
அவ இவ்வளோ அமைதியா இருந்து நான் பார்த்ததே இல்லை.அவ மனசுல என்ன நினைக்குறான்னே என்னால கண்டுபுடிக்க முடியல.எந்த ரியக்ஷனும் முகத்துல காட்ட மாட்றா..
சரி நானைக்கு அவளாவே சரியாகிடுவா நம்ம எதுவும் கேட்க வேண்டான்னு நான் அவள அப்படியே விட்டுட்டேன்.

பாதி நைட்டுல எனக்கு தண்ணி தாகமா இருந்ததுன்னு எந்திரிச்சேன்..
அப்போ கலை பெட்ல காணோம்.நான் இந்த நேரத்துல எங்க போனானு வெளில வந்து பாத்தேன்.ஹால்ல சோஃபால உக்காந்து இருந்தா.நான் அவ பக்கத்துல போய் அவள கலைன்னு கூப்டேன்.அப்பையும் அவ எந்த ரியாக்ஷனும் தராம அப்புடியே உக்காந்து இருந்தா..நான் அதுக்கப்புறம் கலைன்னு சொல்லிட்டு அவள லைட்டா ஆட்டுனேன்.அப்பதான் என்னைய பாத்தா

காதல் ♥️♥️♥️ (Completed)Where stories live. Discover now