Jai pov:
அந்த லெட்டர்ல இருந்தத பாத்துட்டு என்னால ஒன்னும் யோசிக்க முடியல.
அந்த லெட்டர்ல என்ன இருந்துச்சுனா
ஹேப்பி அணிவர்ஸரி ஜெய்.இன்னைக்கு உன் வைஃப் கூட சந்தோஷமா வெளியில போனப்போல.இந்த ஃபோட்டோ எதுக்கு தெரியுமா உனக்கு அனுப்சிருக்கேன் நீ பாத்து ரசிக்கவா.......
நீங்க எங்க போனாலும் உங்கள நான் வாட்ச் பன்னிட்டுதான் இருக்குறேன்னு காமிக்கதான் அனுப்சேன்.
அப்புறம் உங்க அணிவர்ஸரிக்கு நான் கண்டிப்பா எதாவது கிஃப்ட் குடுக்கனும்னு எனக்கு தோனுது.அது என்ன கிஃப்ட்டுனு நானே சொல்றத விட நீயா பாத்தா இன்னும் த்ரில்லா இருக்கும்.........
இந்த லெட்டர் கண்டிப்பா எனக்கு வேண்டாதவங்கதான் அனுப்பிருக்காங்க.ஆனா அது யாருன்னு தெரியலையேன்னு நான் யோசிச்சிட்டே நின்னுட்டு இருந்தேன்.
அப்போ கலை கத்துற சத்தம் கேட்டுச்சு.நான் என்ன ஆச்சுன்னு பதிரிப்போய் உள்ளப் போனேன்.கலை எங்க ரூம்ல கத்துற சத்தம் கேட்டுச்சு.
உள்ள போய் பாத்தேன் அங்க பன்னிருந்த டெக்ரேஷன்லான் கலஞ்சுப்போய் தீப்புடிச்சு எரிஞ்சிட்டு இருந்துச்சு. நான் டக்குனு கலைய ரூம்ல இருந்து வெளியில கூட்டிட்டு போய் விட்டுட்டு செக்யுரிட்டிட்ட இன்ஃபார்ம் பன்னி கொஞ்ச நேரத்துல அனைச்சிட்டோம்.கலை ஏற்கனவே ரொம்ப பயந்துருக்கா இந்த நிலைமையில அவ இங்க இருந்தா சரியா வராது அவளுக்கு பாதுகாப்பும் இல்லைன்னு சென்னைக்கு போலான்னு முடிவுபன்னிட்டு கலைக்கிட்ட சொல்லான்னு போனேன்.
அவ வெளியில உக்காந்து அழுதுட்டு இருந்தா.நான் வரதப்பாத்துட்டு என்னைய வந்து கட்டிப்புடிச்சிட்டு ரொம்ப அழுக ஆரம்பிச்சிட்டா.
"ஷ்ஷ்....ஒன்னும் இல்லை எல்லாத்தையும் அனைச்சிட்டோம்.
எதுவும் இல்லை.எல்லாம் சரியாப்போய்டும் அழக்கூடாது.."னு அவள சமாதானம் பன்னேன்.கொஞ்ச நேரம் பயத்துல என்னைய கட்டிப்புடிச்சிட்டே அழுதிட்டு இருந்தா.அப்புறம் கொஞ்ச நேரத்துல அவளே அமைதியாகிட்டா.
நான் அவள உக்கார வச்சிட்டு தண்ணி எடுத்துட்டு வந்து குடுத்தேன்.
YOU ARE READING
காதல் ♥️♥️♥️ (Completed)
Romanceநான் எதை வேணாலும் மன்னிப்பேன் ஆனா என்கூடவே இருந்துட்டே எனக்கு நம்பிக்கை துரோகம் பன்ற யாரையும் நான் மன்னிக்கவே மாட்டேன்.....அது யாரா இருந்தாலும் சரி..... அந்த நேரத்துல எல்லா சாட்சியும் அவளுக்கு எதிராவே இருந்துச்சு....மத்தவங்க சொல்றத கேட்டு அவள தப்பா...