CHAPTER 21

7.1K 204 32
                                    


Superb melodious song.njoy frndzzzzz

💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖

Kalai POV:

அவன் என்னைய அவனோட ரூம்க்கு தூக்கிட்டு போய் கீழ எறக்கி விட்டுட்டு ரூம் கதவை மூடிட்டு வந்தான்.எனக்கு அதை பாத்துட்டு என்ன பன்ன போறானோனு கொஞ்சம் பயமாய்டுச்சு....

"இ...இப்..இப்ப எதுக்கு நீ ரூம் கதவை க்ளோஸ் பன்ற."

"ஏன் பயமா இருக்குதா..... உன்னால ஒரு நிமிஷம் என்கூட தனியா ஒரே ரூம்ல இருக்க முடியல இதுல நீ எப்புடி என்கூட ஒன்னா ஒரே வீட்டுல தனியா இருக்கப் போற."னு அவன் என்னைய கேட்டான்

"எனக்கு ஒன்னும் பயம்லான் இல்லை.
நான் எதுக்கு உன்ன பாத்து பயப்படனும்."

"அப்போ என்கூட தனியா இருக்குறதுக்கு உனக்கு பயமா இல்லை."

"இல்லை...."

"நான் உன் பக்கத்துல வந்தா பயமா இல்லை அப்புடி தான"னு சொல்லிட்டே என் பக்கத்துல வந்தான்.அவன் பக்கத்துல வர வர எனக்கு பயத்துல வேர்க்க ஆரம்பிச்சிடுச்சு.

"இல்....இ..இல்ல"னு சொன்னேன்.

என்னைக்கும் இல்லாம இன்னைக்கு பாத்து இவன் முன்னாடி திக்குறியே கலை சமாளினு நினைச்சிட்டே அவன பாத்தேன்.

அவன் என்னைய பாத்துட்டே என் கிட்ட நடந்து வந்தான்.நான் என்ன பன்றதுனு தெரியாம அதே எடத்துல ஆடாம அசையாம சிலை மாதிரி நின்னுட்டு இருந்தேன்.

அவன் என் பக்கத்துல வந்து பின்னாடி இருந்து ஹக் பன்னான்.அவனோட மூச்சுக் காத்து என்னோட கண்ணத்துல பட்டுச்சு.

"இப்பக்கூட உனக்கு எதுவும் ஆகலையா"னு என் காதுல மெதுவா கேட்டுட்டு மெதுவா என் கண்ணத்துல கிஸ் பன்னான்.....

அவன் கேட்டதுக்கு என்னால பதில் சொல்ல முடியல.

"என்னாச்சு...பேச்சையே காணோம்.....
இந்த டெக்னிக்கூட நல்லாதான் இருக்குது.இனிமேல் உன்னைய அமைதி ஆக்கனும்னா இதையே ஃபாலோ பன்ன வேண்டியதுதான்."னு சிரிச்சிட்டே சொன்னான்.

காதல் ♥️♥️♥️ (Completed)Where stories live. Discover now