CHAPTER 23

7K 210 40
                                    


Jai pov:

    கலை எல்லா விஷயத்தையும் என்கிட்ட இருந்து மறைக்குறான்னு எனக்கு அவமேல கோவம் வந்துச்சு.நம்ம ரெண்டு பேர் மட்டும்தான் பெங்களூர் போறோம்னு என்கிட்ட சொல்லிட்டு இங்க அவுங்க ரெண்டு பேரையும் வரசொன்னது எனக்கு புடிக்கல.

நான் எப்பவும் கோவமா இருந்தேன்னா யார்கிட்ட என்ன பேசுரோம்னு தெரியாம பேசிடுவேன்.அதான் கலை என்கிட்ட வந்து பேசும்போது  கோபத்துல அவ மனசு கஷ்டப் படுறமாதிரி எதாவது
சொல்லிடக்கூடாதுனு  நான் அமைதியா அவக்கிட்ட பேசாம இருந்தேன்.

அவ விரல வெட்டிட்டு கையில இரத்தம் வரதை பாத்த உடனே என்னோட பொறுமை எல்லாம் போயிடுச்சு.அப்புடி
என்ன கவனம் இல்லாம கிச்சன்ல வேலைப்பாக்குறான்னு எல்லா கோபத்தையும் அவ மேல காட்டி கத்திட்டேன்.

அதுக்கு அவ என்ன சொன்னா தெரியுமா நான் பேசாம அமைதியா இருந்ததுனாலதான் என்னையவே பாத்துட்டு கவணம் இல்லாம வெட்டிக்கிட்டேன்னு அழுதுக்குட்டே
கோபமா சொன்னா.
அப்போதான் நான் எவ்வளோ பெரிய முட்டாள்தனம் பன்னிருக்கேன்னு புரிஞ்சுது.ஒன்னும் இல்லாத விஷயத்தை நான்தான் பெருசாக்கிட்டேனோனு தோனிச்சு.

எனக்கு அப்போ அவக்கிட்ட என்ன சொல்றதுன்னு தெரியலை.

நான் அவ பக்கத்துல இருந்து அவளுக்கு கஷ்டத்தை மட்டும்தான் குடுக்குறேன்னோன்னு எனக்கு தோனிச்சு.
அவகிட்ட போயி என்னைய மன்னிச்சிடுன்னு சொல்லி அவ கண்ணை தொடச்சிவிட்டு ஹக் பன்னிக்கனும்னு இருந்துச்சு.

ஆனா நான் அப்புடி பன்னல ஏன் தெரியுமா ஒவ்வொறு தடவையும் அவக்கிட்ட சாரி கேட்குறேன் ஆனா அவள திரும்ப திரும்ப காயப்படுத்திட்டேதான் இருக்குறேன்.அதுகப்புறம் நான் சாரி கேட்டும் வேஸ்டுதான.

அதுனால நாம அவள விட்டு விலகி இருக்குறது தான் நல்லதுன்னு அவள கொஞ்சம் நேரம் பாத்துட்டே நின்னுட்டு
அப்புறம் எதுவும் பேசாம நான் அமைதியா ரூம்ல வந்து நின்னுட்டு பழச எல்லாம் நினைச்சி பாத்துட்டு இருந்தேன்.

காதல் ♥️♥️♥️ (Completed)Where stories live. Discover now