CHAPTER 38

5.9K 191 61
                                    

Jai pov:

    நான் அர்ஜுன் விஷ்ணு தாரா எல்லாரும் உக்காந்து பேசிட்டு இருந்தோம்....

"ஜெய்....உனக்கு யார் மேலையாவது சந்தேகம் இருக்குதா...."

"ஆமா.....ஒருத்தர் மேல சந்தேகமா இருக்குது....ப்ரீயா...."

"நீ அடிக்கடி உன்னோட ஃப்ரெண்ட்னு சொல்லுவியே அந்த பொன்னா...."

"எஸ் அவளேதான்....அவ இல்லன்னா அவ அப்பா ரெண்டு பேர்ல யாராவது இதுமாதிரிலாம் பன்னனும்."

"எந்த ரீசன்காக அவுங்க உன்னைய பழிவாங்க நினைக்குறாங்கன்னு நீ சொன்னா எனக்கு இன்னும் ஹெல்பா இருக்கும்..."னு அவை கேட்டா

நான் ஒன்னுவிடாம நடந்த எல்லாத்தையும் அவக்கிட்ட சொன்னேன்..
அவ அதைக்கேட்டு என்னைய ஒரு நிமிஷம் பாத்துட்டு என் மூஞ்சிலையே குத்திட்டா

"தாரா ஏன் இப்போ என்னைய குத்துன...வழிக்குது லூசு...."

"இவ்வுளோ சேடிஸ்டா நீ....நான் நினைச்சுக்கூட பாக்க முடியல....இப்ப வந்தவ நான் ....என்னாலேயே கலை இந்த மாதிரிலான் பன்னிருப்பான்னு நினைச்சுக்கூட பாக்க முடியல....நீ எப்புடிதான் அவள லவ் பன்னிட்டு சந்தேகப் பட்டியோ....ஒருவேளை அந்த பென்ட்ரைவ் உன் கைக்கு வராம இருந்துருந்தா......என்ன பன்னிருப்ப.....கடைசி வரைக்கும் உண்மை என்னன்னு தெரிஞ்சுக்காமலே அவள கஷ்டபடுத்திட்டு இருந்துருப்ப அப்புடி தான....உன்ன எல்லாம் என் ஃப்ரெண்டுனு சொல்லவே அசிங்கமா இருக்குது...அட்லீஸ்ட் உண்மை என்னன்னு தெரிஞ்சுக்க கூட நீ ட்ரை பன்னல.....பின்ன என்னடா நீலான் லவ் பன்ன....திரும்பி இதுமாதிரி யாராவது கலைய பத்தி தப்பா சொல்லி ஃபோட்டோஸ் குடுத்தா நம்பிடுவியா...."னு கேட்டா

"தாரா நான் தப்பு பன்னிருக்கேன் நான் ஒத்துக்குறேன்....ஆனா நான் இப்போ கலைய நான் நல்லாவே புரிஞ்சுக்கிட்டேன்.....அதுனால இதுமாதிரிலாம் திருப்பி நடக்காது...."

"நடக்கக்கூடாது....அப்புடி எதாவது நடந்துச்சு நானே உன்னைய அடிச்சே கொன்றுவேன்...."

காதல் ♥️♥️♥️ (Completed)Where stories live. Discover now