CHAPTER 7

8K 206 15
                                    

ஜெய் POV:
நான் காலையில அப்பாகிட்ட ரேஷ்மி கல்யாண விஷ்யமா பேசுரதுக்காக கீழப் போய் அம்மா கிட்ட அப்பா எங்கன்னு கேட்டேன். ....
அவரு ஃப்ரெண்ட் யாரோ கேரளால முடியாம ஹாஸ்பிடல்ல சேத்துருக்காங்க.... அவர பாக்க  அப்பா போயிருக்குறதா அம்மா சொன்னாங்க.....நானும் அப்பா வந்த உடனே பேசிக்கலானு விட்டுட்டேன்.
நான் ஹால்ல பேப்பர் பாத்துட்டு இருந்தேன் அப்போ ரேஷ்மி என் பக்கத்துல வந்து உக்காந்தா.நான் அவக்கிட்ட பேச ஆரம்பிச்சேன்.

"ரேஷ்மி நான் ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டல."

"சொல்லு அண்ணா எதுவா இருந்தாலும் பரவால்ல."

"இல்ல நெஜமாவே விஷ்ணு உன்ன லவ் பன்றானா அவ நல்லவனானு உனக்கு தெரியுமா."

"அண்ணா நீ என்ன கேட்க வரனு புரியுது.என் மேல உள்ள அக்கரையில கேட்குற.
நீ எத நினைச்சும் கவலைப்பட வேண்டாம்.
விஷ்ணு ரொம்ப நல்லவன்.என்ன ரொம்ப லவ் பன்றான்.என்ன நல்லா பாத்துப்பானு எனக்கு தெரியும்."

"இல்ல ரேஷ்மி நான் என்ன சொல்ல வரேனா நம்ம கம்பெனிக்கு போட்டியா அவன் கம்பெனிதான் இருக்கு.அதனால அவன் என்ன பழிவாங்க உன்ன வச்சு ப்ளே பன்றானோனு தோனுது."

"அண்ணா அவன் உனக்கு
போட்டியா தான் இருக்குறான் ஆனா என்ன வச்சு உன்ன ஜெயிக்குற அளவுக்கு அவுளோ கேவலமானவன் இல்ல.அவன் அப்புடி பன்னமாட்டான்."

" ரேஷ்மி அப்புடி இல்ல உன்ன வச்சு என்னை தோக்கடிப்பேனு என்கிட்டையே சேலஞ் பன்னான் அதான் சொல்றேன் அவன் வேண்டாம் டா வேற நல்ல பையனா பாத்து கல்யாணம் பன்னிக்கலாம்."

"அண்ணா நீதான் இப்போ சீப்பா பிஹேவ் பன்ற அவன் உனக்கு போட்டியா இருக்குறவன்றதுனால வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசாத.

அவனும் நானும் இரண்டு வர்ஷமா லவ் பன்றோம் அவனுக்கு நான்தான் உன் தங்கச்சினு தெரியும்.ஆனா இது வரைக்கும் நீ சொன்ன மாதிரி எதுவுமே பன்னதில்ல.

காதல் ♥️♥️♥️ (Completed)Where stories live. Discover now