Km eyelockJ to M: என்ன னே இப்படியே நிக்கறாங்க
Ml: எனக்கு இவங்களை பார்க்கும் போது முல்லை எழுதின கண்ணாடி மாளிகை சிறுகதை தான் நியாபகம் வருது மாயா...
M: கதையை நினைவு கூற
கண்ணாடி மாளிகை
இரு காதலர்கள் சேர மிகவும் போராடினர், ஆனால் அவர்களால் சேர்ந்து வாழ முடியவில்லை, அதனால் மரணத்தில் சேர்ந்தனர். அடுத்த ஜென்மத்தில் இருவரும் அரபு நாட்டில் பிறந்தனர். ஒரு நாள் இருவரும் சந்தித்து, Hero அவளை பின்தொடர்ந்தான், அவளோ பயந்து ஓடினாள், சென்று அங்கிருந்த கண்ணாடி மாளிகையினுள் புகுந்தாள், வெளியே இருந்து பார்த்தால் உள்ளே இருப்பது தெரியும் ஆனால் உள்ளிருந்து பேசுவது கேட்காது, அவன் அவளை வெளியே நின்ற படி பார்த்து கொண்டே இருக்க, உள்ளிருந்து இவள் திட்டி கொண்டே இருந்தால், ஆனால் அவள் பார்வை அவன் கண்கள் மீதே இருந்தது, நினைவு இல்லாவிட்டாலும் அவள் கண்கள் அவன் கண்களுடன் பேசிக்கொண்டு தான் இருந்தது...
Ml: இவங்க காதலும் ஜென்ம ஜென்மமா தொடருதோ என்னவோ, ரெண்டு பேரும் பார்த்தது இல்லை, பேசினது இல்லை, ஒரே நேரத்தில இரண்டு பேர் மனசிலயும் இன்னொருத்தரை விரும்பிருக்காங்க, ஒருத்தர் மனசில என்ன இருக்கு னு இன்னொருத்தருக்கு தெரியாது ...
M: ஆச்சர்யம் தான், நாம உள்ள போவோம், அவங்க பேசிட்டு வரட்டும் வாங்க, என சொல்லி மூவரும் உள்ளே சென்றனர்...
Km ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ள 4 கண்களிலும் கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது...
காதல் வாழ்வது மனதில் என்றாலும் தோன்றுவது கண்களில் தான், அவள் கண்களில் இருந்த வலியை அவனும், அவன் கண்களில் இருந்த நிம்மதியை அவளும் உணர்ந்தனர்...
இருவருக்கும் வார்த்தை வரவில்லை மாறாக கண்கள் பேசிக்கொண்டது....
வார்த்தை தேவையில்லை வாழும் காலம் வரை
பாவை பார்வை மொழிப் பேசுமே
YOU ARE READING
கதிரின் அகமுடையாள்
FanfictionKm உறவினர் அல்ல, ஒருவரை ஒருவர் பார்த்ததில்லை, கடிதத்தில் மட்டும் அறிமுகம் உண்டு