2 தந்திரம்

1.5K 60 6
                                    

2 தந்திரம்

ஒரு நொடி திகைத்து நின்ற ரிஷிவரன், தன்னை சமாளித்துக் கொண்டு,

"சாரி" என்றபடி மீண்டும் அவர்களை துரத்திக் கொண்டு ஓடினான்.

"அப்பாடா" என்று நிம்மதி பெருமூச்சு விட்டாள் மதுமிதா.

நல்லவேளை, அவனது கை, ஒரு அங்குலம் இடைவெளியில் அவள் முகத்தருகே நின்று விட்டது. இல்லாவிட்டால், இந்த நேரம் அவளது அழகு முகம் உடைந்து நொறுங்கி இருக்கும்.

அவளை நோக்கி ஓடிவந்த லலிதா,

"அவன் என்னடி சொன்னான்?" என்றாள்.

"சாரி சொன்னான்"

"சாரியா? எதுக்கு?"

"என் முகத்தை உடைக்காம விட்டதுக்கு" என்றாள் ஏகதாளமாய்.

லலிதா முகம் சுளிக்க, வாய்விட்டு சிரித்தாள் மதுமிதா. அப்பொழுது அவர்களது கல்லூரிக்குள் ஒருவன் மிகவும் ஜம்பமாய் நுழைவதை அவர்கள் பார்த்தார்கள். *யார் இந்த ஜோக்கர்?* என்பது போல் லலிதாவை பார்த்தாள் மதுமிதா.

"அவன் தான் அருணாச்சலம். எம்எல்ஏ சோனாசலத்தோட ஒரே பையன்" என்றாள் லலிதா.

"ஓஹோ... சரி காயத்ரியும், பவானியும் எங்க போனாங்க?" என்றாள் அருணாச்சலத்திற்கு எந்த முக்கியத்துவமும் வழங்காமல்.

"அவங்க ரெண்டு பேரும் லைப்ரரிக்கு போயிருக்காங்க. இரு நான் போய் பார்த்துட்டு வரேன்" என்று அங்கிருந்து சென்றாள் லலிதா.

அரசியல் வட்டத்தில் மட்டுமல்லாமல், சென்னை மாநகரத்திலும் அருணாச்சலம் மிகவும் பிரபல்யம். அவனால் முடியாதது என்று எதுவுமே கிடையாது. அவன் அந்த கல்லூரியின் பழைய மாணவன். அந்த கல்லூரியில் இன்னும் கூட தனக்கு செல்வாக்கு இருக்கிறது என்பதை காட்டிக் கொள்வதற்காக அடிக்கடி அங்கு வந்து செல்வதை வழக்கமாய் வைத்திருந்தான். கல்லூரியின் முதல்வரின் அறையை நோக்கி அவன் நடந்தான். அப்பொழுது, தனியாய் நின்றிருந்த ஒரு அழகிய பெண்ணை பார்த்து அவன் கால்கள் நகராமல் நின்றது. அவன் கண்களில் பட்டது நம் மதுமிதா தான். அவன் அவளை நோக்கி வருவதை பார்த்த மதுமிதா, எச்சரிக்கை அடைந்தாள். அவள் முன்னாள் வந்த அருணாச்சலம், தன் முப்பத்திரண்டு பல்லும் தெரியும்படி சிரித்துக் கொண்டு,  

கர்வம் அழிந்ததடி...! (முடிந்தது)✔️Where stories live. Discover now