36 காரணம்

601 48 3
                                    

36 காரணம்

"மன்னிச்சுடுங்க. எனக்கு இந்த சம்பந்தத்தில் சம்பந்தமில்ல" சாம்பசிவத்தின் பதில் அங்கிருந்து அனைவரையும் உடைத்துப் போட்டது.

மதுமிதாவின் கண்கள் அணிச்சையாய் கலங்கியது. தன் தந்தையிடம் இருந்து அப்படி ஒரு முடிவை அவள் எதிர்பார்க்கவில்லை. அவள் ரிஷிவரனை சீண்டி பார்க்க நினைத்தது என்னவோ உண்மை தான். ஆனால் அது வேறு. ஆனால் இப்போது, அவள் தன் தந்தைக்கு எதிராக எப்படி எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியும்?

ரிஷிவரனின் நிலையையோ வார்த்தைகளால் வர்ணிக்க முடியவில்லை. மதுமிதாவின் கலங்கிய கண்களை அவன் நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தான். கிரிவரனும், ரோகிணியும் மனம் உடைந்து போனார்கள். அவர்கள் சாம்பசிவத்தை குறைத்து எடை போட்டு விட்டதாய் எண்ணினார்கள். தாட்சாயினி கூட சாம்பசிவத்தின் மீது வெகு கோவமாய் இருந்தார். இப்படிப்பட்ட ஒரு நல்ல வரனை யாராவது வேண்டாம் என்று மறுப்பார்களா? தன்னிடமும், மதுமிதாவிடமும் கேட்காமல், அவராகவே எப்படி இவ்வாறு ஒரு முடிவை எடுக்க முடியும்?

"உங்களுக்கு ஏன் இந்த சம்மந்தத்துல சம்மதம் இல்லன்னு நாங்க தெரிஞ்சுக்கலாமா?" என்றார் கிரிவரன் தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டு.

"அது தேவையில்லைன்னு நான் நினைக்கிறேன். ஏன்னா, உங்க மனசை காயப்படுத்த நான் விரும்பல"
என்ற அவரது பதில் அவர்களுக்கு மேலும் அதிர்ச்சியை தந்தது. காயப்படுத்துவதா? அப்படி என்ன கூறி விடப் போகிறார் சாம்பசிவம்?

"பரவாயில்ல சொல்லுங்க. என்ன காரணம்னு நாங்க தெரிஞ்சுக்கணும் இல்லையா?" என்றார் ரோகிணி. அவருக்கு காரணத்தை தெரிந்து கொண்டே ஆக வேண்டும்.

"நம்ம ரெண்டு குடும்பத்தோட லைஃப் ஸ்டைலும் வேற. உங்களைப் பொறுத்த வரைக்கும், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு பொண்ணோட சுத்துறது பெரிய விஷயமா இல்லாம இருக்கலாம். ஆனா எங்களை பொறுத்த வரைக்கும், ஒருத்தன் எப்படிப்பட்டவன்னு அவனுடைய பழக்க வழக்கத்தை வச்சு தான் நாங்க முடிவு பண்ணுவோம்" என்றார் நேருக்கு நேராய் அவரது கண்களை சந்தித்தபடி.

கர்வம் அழிந்ததடி...! (முடிந்தது)✔️Where stories live. Discover now