5 யார் அவள்?

943 58 5
                                    

 5 யார் அவள்?

"என் பிள்ளை எப்படி இருக்கான்?" என்றார் கிரிவரன் அந்த செவிலியிடம்.

"நல்லா இருக்காரு சார். கரெக்டான டைமுக்கு ஹாஸ்பிடலுக்கு கூட்டிகிட்டு வந்துட்டதால பிளட் லாஸ் நிறைய இல்ல. லேட்டா கொண்டு வந்திருந்தா, அவரோட கண்டிஷன் ரொம்ப கிரிட்டிக்கல்லா தான் இருந்திருக்கும்"

ரிஷிவரனை மருத்துவமனையில் சேர்த்த அந்த பெண்ணை, இங்கும் அங்கும் தேடினார் கிரிவரன். அவள் அந்த அறையில் இல்லாமல் போகவே,

"அந்த பொண்ணு எங்க சிஸ்டர்?" என்றார்.

"டீ குடிச்சிட்டு வரேன்னு கேன்டினுக்கு போனா, சார்"

"அப்படிங்களா? சரி, நான் போய் பாத்துட்டு வரேன்"

அந்தப் பெண்ணை தேடி கேன்டினுக்கு சென்ற கிரிவரன், அங்கு யாரையும் காணாமல், மீண்டும் அவசர சிகிச்சை பிரிவிற்கு திரும்பினார்.

"கேண்டின்ல யாரும் இல்லையே சிஸ்டர்...?" என்றார்.

"ஒருவேளை பாத்ரூமுக்கு போயிருக்காளோ என்னவோ. இப்ப வந்துடுவா... அவ உங்க சொந்தக்கார பொண்ணா தான் சார் இருக்கணும்"

"இல்ல சிஸ்டர். அவ எங்க சொந்தக்கார பொண்ணு இல்ல. உண்மைய சொல்ல போனா, அவ யாருன்னே எனக்கு தெரியாது"

"என்ன சார் இப்படி சொல்றீங்க? நான் அவ உங்களுக்கு ரொம்ப நெருக்கமான சொந்தமா இருப்பான்னு நெனச்சேனே"

"எத வச்சு நீங்க அப்படி நினைச்சீங்க, சிஸ்டர்?"

"அவருக்கு ரொம்ப தெரிஞ்ச பொண்ணு மாதிரியும், உங்க பிள்ளையோட உயிர் அவளுக்கு ரொம்ப முக்கியம் மாதிரியும் அவரை பார்த்துக்கிட்டா சார்" அந்த செவிலி சற்று மிகைப்படுத்தி தான் கூறினார்.

அவர் கூறியது, கிரிவரனின் புருவங்களை உயரச் செய்தது.

"அவ உங்க சொந்தக்காரி இல்லனா, எதுக்காக சார் அவ்வளவு அக்கறை எடுத்து கவனிச்சுக்கிட்டா?" என்ற கேள்வியும் எழுப்பினார்.

அவருக்கே ஒன்றும் புரியாத போது, கிரிவரினால் என்ன பதில் கூற முடியும்?

கர்வம் அழிந்ததடி...! (முடிந்தது)✔️Where stories live. Discover now