40 மீண்டும் சவால்
தான் திட்டமிட்டது படி, ஜெனிஃபரை சமாதான படுத்தும் சாக்கில், பேட்ரிக்கை சந்திக்க, ஜெனிஃபரின் வீட்டிற்கு சென்றாள் தேஜஸ்வினி. அவளைப் பார்த்த ஜெனிஃபர் பெருமூச்சு விட, அவளை பார்த்து புன்னகை புரிந்தாள் தேஜஸ்வினி.
"என் மேல நீ அப்சட்டா இல்லன்னு நம்புறேன்" என்று தேஜஸ்வினி கேட்க,
"நான் உன் மேல அப்செட் ஆக எந்த காரணத்தையும் நீ கொடுக்க மாட்டேன்னு நான் நம்புறேன்" என்றாள் ஜெனிஃபர்.
"நிச்சயமா இல்ல. அப்படி செய்ற எண்ணம் எனக்கு இல்லைன்னு உன்கிட்ட சொல்லத் தான் வந்தேன். என்னை பத்தி உனக்கு தெரியாதா?" என்றாள் முகத்தை சோகமாய் வைத்துக் கொண்டு.
"எனக்கு உன்னை பத்தி நல்லா தெரியும். அது தான் என்னோட பயமே. நீ அவ்வளவு சீக்கிரம் எதையும் விட்டுடுறவ இல்ல. அதை நானே பல தடவை பார்த்திருக்கேன்"
தேஜஸ்வினி திடுக்கிட்டாள்.
"இப்போ நான் அப்படி இல்ல. நான் ரொம்ப மாறிட்டேன், ஜெனி. ரிஷி என்னை ஏத்துக்க மாட்டேன்னு சொன்னதுக்கு பிறகு என் மனசை நான் மாத்திக்கிட்டேன்" என்றாள் தாழ்ந்த குரலில்.
"அது தான் உனக்கு நல்லது"
"ரிஷிக்கும் மதுவுக்கும் நிச்சயதார்த்தம் எல்லாம் எதுவும் நடக்கல. மதுவோட அப்பா அவங்க கல்யாணத்துக்கு சம்மதிக்கல. அதைத் தான் நான் உங்க அண்ணன் கிட்ட சொல்ல நினைச்சேன்"
"ஆனா, ரிஷி மதுவை காதலிக்கிறான் தானே?"
ஆமாம் என்று தலையசைத்தாள் தேஜஸ்வினி.
"அது தானே முக்கியம்?"
"ஆமாம்... முக்கியம் தான். அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகப் போறதா, இவங்க தப்பா நினைச்சுக்கிட்டு இருக்காங்கன்னு தான் நான் சொல்ல நினைச்சேன்"
"அது தேவை இல்லாததுன்னு உனக்கு புரியலையா?"
"என்னை பத்தின உன்னுடைய எண்ணத்தை நீ மாத்திக்க போறதில்ல. அதனால தான் என்னோட இன்டென்ஷனை நீ சந்தேகப்படுற. ஆனா, நீ நினைக்கிறது தப்பு"
YOU ARE READING
கர்வம் அழிந்ததடி...! (முடிந்தது)✔️
Romanceஅவன் அந்த கல்லூரியின் *டான்* என்று பெயர் பெற்றவன். அந்த கல்லூரி பெண்களின் கனவு நாயகன். அவனது கடைக்கண் பார்வைக்காக பெண்கள் தவம் கிடந்தார்கள். அதே கல்லூரியை சேர்ந்த நம் கதையின் நாயகி, முற்றிலும் வேறானவள். *காதல்* எப்பொழுதும் இரண்டு நேர் எதிர் துருவங்...