31 ரிஷிவரனின் சமாளிப்பு

1.1K 55 7
                                    

31 ரிஷிவரனின் சமாளிப்பு

அருணாச்சலத்தை நோக்கி நடந்தான் விஷ்வா. கண்களை இறுக்க மூடிக்கொண்டு கட்டிடத்தின் பின்னால் ஒளிந்து கொண்டு நின்றாள் மதுமிதா. தன்னை யாரோ தொடுவதை உணர்ந்த அவள், திடுக்கிட்டு கண்விழித்தாள். ரிஷிவரன் அவளுக்கு முன்னால் நின்றிருந்தான்.

"அருணாச்சலம் வந்திருக்கான்" என்றாள் பீதியோடு.

"நீ இங்க ஒளிஞ்சுகிட்டதை விஷ்வா பாத்துட்டு, அருணாச்சலத்தை இங்க கூட்டிகிட்டு வர போயிருக்கான்"

"அய்யய்யோ இப்போ நான் என்ன செய்றது?"

"அவன் உன்னை மாட்டி விட நினைக்கிறான்"

"அவன் கண்டிப்பா அதை செய்வான்" என்றாள் பதட்டத்துடன்.

"சரி என் கூட வா" என்று அவள் கையைப் பிடித்து, அங்கிருந்து அவளை இழுத்துக் கொண்டு ஓடினான்.

மதுமிதா ஒளிந்திருந்த கட்டிடத்தை விட்டு, அவர்கள் சில கட்டிடங்களை கடந்து வந்த பின், அவளை மறைந்திருக்க சொல்லி, அவள் முன்பு நின்றிருந்த இடத்தை பார்வையிட செய்தான். இருவரும், மெல்ல அவள் நின்றிருந்த இடத்தை எட்டிப் பார்க்க, அங்கு அருணாச்சலத்துடன் விஷ்வா நின்று கொண்டிருந்தான்.

"நான் சொன்னேன்ல?"

ஆம் என்று பயத்துடன் தலையசைத்தாள் மதுமிதா.

"நான் உனக்கு கால் பண்ணி கூப்பிடுற வரைக்கும், இந்த இடத்தை விட்டு  வெளியில வராத"

மதுமிதா சரி என்று தலையசைக்க, அவளை அங்கேயே விட்டுவிட்டு, அருணாச்சலத்தை நோக்கி சென்றான் ரிஷிவரன். அவனை கண்ட அருணாச்சலம், பளீரென்று புன்னகை புரிந்தான்.

"ஹாய் ரிஷி... எப்படி இருக்க?"

"நல்லா இருக்கேன்"

விஷ்வாவை பார்த்த அருணாச்சலம்,

"நான் ரிஷிகிட்ட கொஞ்சம் பேசணும். நீ கெளம்பு" என்றான்.

 விஷ்வாவுக்கு ஏமாற்றமாய் போனது.

"சரி" என்று அரைமனதாய் அங்கிருந்து நடந்தான்.

கர்வம் அழிந்ததடி...! (முடிந்தது)✔️Where stories live. Discover now