19 பிரிவு

801 59 7
                                    

19 பிரிவு

சப்தமின்றி தன் படுக்கைக்கு வந்த ரிஷி, தன் அம்மா தன்னை பற்றி கூறிய விஷயங்களை எண்ணிக் கொண்டிருந்தான். அதுவரை அவன் மதுமிதாவின் நிராகரிப்பை பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை. தான் மதுமிதாவிடம் நடந்து கொண்ட விதம் பற்றி, தன் அம்மா நேரடியாக வெளிப்படுத்திய அதிருப்தி, அவனை அது பற்றி எண்ண வைத்திருந்தது.

அது மட்டுமல்லாமல், அவனது அப்பா, மதுமிதா, அவனது அம்மாவைப் போலவே இருப்பதாக கூறினார். இதற்கு முன் கிரிவரன் அவனிடம் அது பற்றி கூறியிருக்கவில்லை. அதனால் தான், அவர் மதுமிதாவை முதல் முறை காந்தி பூங்காவில் சந்தித்த போது, அவன், அவளிடம் நடந்து கொண்ட விதம் குறித்து, அவர் அந்த அளவிற்கு கவலைப்பட்டார் போலும். அவனது அம்மாவே அவனது நடவடிக்கையை விரும்பவில்லை என்றால், மதுமிதா எப்படி விரும்புவாள்? முதன் முறையாய், *சரியாய்* யோசித்தான் ரிஷிவரன்.

அவனுக்கு மதுமிதா வேண்டும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. அவனை பிளேபாய் என்று மதுமிதா நினைத்துக் கொண்டிருக்கும் வரை, அவள் நிச்சயம் அவனை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று அவனது அம்மா கூறினார். அதற்காக அவளை விட்டு விடுவது என்பது நடக்காத காரியம். அவன் உயிருடன் இருப்பதற்கு அவள் தான் காரணம். அதுமட்டுமல்லாமல், தொலைந்திருந்த அவர்களது குடும்பத்தின் சந்தோஷத்தை மீட்டு கொடுத்தவள் அவள். அவனது அம்மாவை அவனிடம் கொண்டுவந்து சேர்த்திருக்கிறாள். அவள் அவனது தேவதை. அவனால் மட்டும் தான் அவளுக்கு சந்தோஷமான வாழ்வை தர முடியும். அவள் மட்டும் தான் அவனுக்கு மனைவியாய் இருக்க முடியும். எப்பாடுபட்டாவது அவளை மணந்து கொண்டே தீர வேண்டும். ஆனால் எப்படி? அது பற்றி யோசித்தபடி கண்களை மூடினான். அவனை மதுமிதா ஏற்றுக் கொள்ளாத வரை, நிச்சயம் ரோகிணி அவனுக்கு உதவி செய்யப் போவதில்லை என்பது அவனுக்கு புரிந்தே இருந்தது.

மறுநாள் காலை

தூக்கத்திலிருந்து கண்விழித்த மதுமிதா, தன் கை, கால்களை நெட்டி முறித்து விட்டு, தான் உறங்கிக் கொண்டிருந்த அறையை விட்டு வெளியே வந்தாள். கிரிவரன் குடும்பத்தினர் பிள்ளைகளுடன் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து அவள் அமைதியாய் நின்றாள்.

கர்வம் அழிந்ததடி...! (முடிந்தது)✔️Where stories live. Discover now