38 மதுமிதாவின் கோபம்
கல்லூரியிலிருந்து வெறுப்புடன் வீடு திரும்பினாள் மதுமிதா. அவள் முகத்தை பார்த்த உடனேயே வித்தியாசத்தை புரிந்து கொண்டார் தாட்சாயினி.
"மது..."
"ஹாங்...?"
"என்ன ஆச்சு?"
மதுமிதா விழிப்படைந்தாள்.
"ஏம்மா?"
"பார்க்க ரொம்ப டல்லா இருக்கியே..."
"தலை வலிக்குதும்மா"
"காபி சாப்பிடுறியா?"
"குடிச்சா நல்லா இருக்கும்னு தான் தோணுது"
"கொண்டு வரேன்"
அவளுக்கு காபி கலந்து கொண்டு வர சமையலறைக்கு சென்றார் தாட்சாயணி. அவருக்கு தெரியும், மதுமிதா மனதில் ஏதோ அரித்துக் கொண்டிருக்கிறது என்று. தலைவலி என்று அவள் கூறியது ஒரு சாக்கு. காப்பியை கலந்து எடுத்துக்கொண்டு, அவளது அறைக்குச் சென்றார் தாட்சாயினி.
முகத்தைக் கூட கழுவாமல், கட்டிலில் அமர்ந்து கொண்டு, தரையை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள் மதுமிதா. வழக்கமாய், வெளியே சென்று வந்தவுடன், அவள் நேராக செல்வது குளியல் அறைக்குத்தான். சில்லென்ற நீரில் முகத்தை கழுவி புத்துணர்ச்சி அடைந்த பின் தான் அவளுக்கு பேசவே தோன்றும்.
தாட்சாயணி அவளது தோளை தொட, தன் தலையை உயர்த்தி அவரைக் கண்டாள் மதுமிதா.
"என்ன ஆச்சு?"
ஒன்றுமில்லை என்பது போல் தலையசைத்துவிட்டு, அவர் கையில் இருந்த காப்பி குவளையை பெற்றுக் கொண்டாள்.
"எது உன்னை பாதர் பண்ணுது?" அவளுக்கு முன்னால் அமர்ந்தார் தாட்சாயினி.
"ஒன்னும் இல்லையே" என்று காப்பியை பருகினாள் மதுமிதா.
"நீ ரிஷியை விரும்புறியா?" என அவர் கேட்டவுடன், காபி குடிப்பதை நிறுத்திவிட்டு அவரை உறுதியுடன் ஏறிட்டாள் மதுமிதா.
"உனக்கு அவனை பிடிச்சிருக்குன்னு எனக்கு தெரியும்"
"அது விஷயம் இல்ல மா"
YOU ARE READING
கர்வம் அழிந்ததடி...! (முடிந்தது)✔️
Romanceஅவன் அந்த கல்லூரியின் *டான்* என்று பெயர் பெற்றவன். அந்த கல்லூரி பெண்களின் கனவு நாயகன். அவனது கடைக்கண் பார்வைக்காக பெண்கள் தவம் கிடந்தார்கள். அதே கல்லூரியை சேர்ந்த நம் கதையின் நாயகி, முற்றிலும் வேறானவள். *காதல்* எப்பொழுதும் இரண்டு நேர் எதிர் துருவங்...