24 எதிரிகள்
அன்பு இல்லம்
"அப்புறம்?" என்றார் கிரிவரன்.
"அப்புறம் என்ன?" என்றான் ரிஷிவரன் புரியாமல்.
"தன்னோட மகளை பார்த்துக்கிற ரொம்ப பெரிய பொறுப்பை உன் மாமியார் உன்கிட்ட கொடுத்திருக்காங்களே..." என்றார் கிண்டலாய்.
அவன் என்ன பதில் கூறுகிறான் என்று ஆவலாய் ஏறிட்டார் ரோகிணி.
"டாட், அவங்க அதை ஒரு கர்ட்டஸிக்கு சொல்லியிருப்பாங்க"
"அப்படின்னா நீ மதுவை பாத்துக்க போறதில்லையா?"
"அது வேற விஷயம் டாட். உண்மையை சொல்லப் போனா, நான் அதை ஏற்கனவே செஞ்சுகிட்டு தான் இருக்கேன்... எப்பவும் செஞ்சிக்கிட்டும் இருப்பேன்... அவ என் காதலை ஏத்துக்கிட்டாலும் சரி, ஏத்துக்காம போனாலும் சரி..."
"கேக்கவே சந்தோஷமா இருக்குடா மகனே"
அவரைப் பார்த்து சிரித்து விட்டு தன் அறைக்கு சென்றான் ரிஷிவரன்.
"என் மகன் கிட்ட என்ன ஒரு மாற்றம்...!" என்றார் கிரிவரன்.
பெருமையுடன் புன்னகை புரிந்தார் ரோகிணி.
"இதுக்கெல்லாம் நீ தான் காரணம், ரோகிணி"
"இல்ல. நம்ம குட்டி ரொம்ப நல்ல பிள்ளை. அவன் பொறுப்பில்லாம திறிஞ்சுக்கிட்டு இருந்தாலும், இது தான் அவனுடைய இயற்கை குணம். நேரம் கூடி வரும் போது, அவனோட குணம் வெளியில வருது. அதோட மட்டுமில்லாம, அவனுடைய காதல் ரொம்ப உண்மையானது. அதனால தான், நான் சொன்ன வார்த்தையை கேட்டு அவன் நடந்துக்கிறான். ஏன்னா, உண்மையிலேயே மது தன் வாழ்க்கையில வரணும்னு அவன் விரும்புறான்." என்றார் ரோகிணி.
"என்னவா வேணும்னாலும் இருக்கட்டும், அதுக்கான அத்தனை கிரடிடெட்டும் உன்னைத் தான் சேரும்" என்றார் கிரிவரன் தன் மனைவியை விட்டுக் கொடுக்காமல்.
......
முகத்தை அலம்பி கொண்டு குளியல் அறையில் இருந்து வந்த ரிஷிவரன், சிரித்தபடி கட்டிலில் அமர்ந்தான். அவனுடைய குடும்பமும், மதுமிதாவின் குடும்பமும் நண்பர்கள் ஆகிவிட்டார்கள். இதன் பிறகு, அவர்களது திருமணத்திற்கு பெரிய முட்டுக்கட்டை என்று எதுவும் இருக்காது. அவனது பெற்றோர் சென்று கேட்டால், நிச்சயம் மதுமிதாவின் பெற்றோர்கள் அவர்களது திருமணத்திற்கு சம்மதிப்பார்கள். ஆனால் அதற்கு முன், அவன் மதுமிதாவின் சம்மதத்தை பெற வேண்டும். அப்பொழுது தான், அவனது அம்மா அடுத்த அடியை எடுத்து வைப்பார். மதுமிதாவை எண்ணியபடி கட்டிலில் சாய்ந்தான். அவன் சந்தித்த பெண்களிலேயே, அவள் ஒருத்தி தான் மிகவும் வித்தியாசமானவள். அவளை எப்படித்தான் கைப்பிடிக்க போகிறானோ என்று எண்ணியபடி உறங்கிப் போனான்.
YOU ARE READING
கர்வம் அழிந்ததடி...! (முடிந்தது)✔️
Romanceஅவன் அந்த கல்லூரியின் *டான்* என்று பெயர் பெற்றவன். அந்த கல்லூரி பெண்களின் கனவு நாயகன். அவனது கடைக்கண் பார்வைக்காக பெண்கள் தவம் கிடந்தார்கள். அதே கல்லூரியை சேர்ந்த நம் கதையின் நாயகி, முற்றிலும் வேறானவள். *காதல்* எப்பொழுதும் இரண்டு நேர் எதிர் துருவங்...