8 மதுமிதா தான்
ரிஷியின் நண்பர்கள், அவன் அந்தப் பெண்ணைப் பற்றி மீண்டும் மீண்டும் பேசியதை கேட்டு வெறுத்துப் போனார்கள். அவன் அந்தப் பெண்ணை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும் என்றும், தன்னுடைய உள் மனம் அவளை அவன் கண்டுபிடிப்பான் என்று கூறுவதைப் பற்றியும், அவன் பேசும் போதெல்லாம் அவர்கள் கையெடுத்து கும்பிட்டு, அழ துவங்கினார்கள்.
"மச்சான் தயவு செய்து எங்களை விட்டுடுடா... எங்களுக்கு காதுல ரத்தம் வருது..." கெஞ்சினான் பாலா.
"சேம் பிளட்" என்றான் ஜெயப்பிரகாஷ்.
"அந்தப் பொண்ண கண்டு பிடிக்க என்ன செய்யணும் சொல்லு, செய்றோம். ஆனா, இந்த மாதிரி பேசிப்பேசியே எங்களை கொல்லாத" என்று மூக்கை சிந்தினான் சுதாகர்.
"என்னை பார்த்தா உங்களுக்கு எப்படி டா தெரியுது? நான் பினாத்துறேன்னு நினைக்கிறீங்களா? என்னோட ஃபீலிங்க்ஸை நீங்களே புரிஞ்சிக்கலன்னா, வேறு யாருடா புரிஞ்சுக்குவா?" என்றான் ரிஷி.
"அந்தப் பொண்ணை கண்டுபிடிக்க நம்ம கிட்ட எந்த வழியும் இல்ல. சும்மா பேசறதனால என்ன மச்சான் ஆயிட போது?" என்றான் பாலா.
ரிஷிக்கும் கூட அதை எப்படி செய்வது என்று தான் புரியவில்லை.
மதுமிதா மட்டுமல்ல, அந்த ஒட்டுமொத்த கல்லூரியுமே ரிஷியின் திடீர் மாறுதலை கண்கூடாய் கண்டது. அவன் தனது சுறுசுறுப்பை மொத்தமாய் தொலைத்தான். எதிலுமே விருப்பமில்லாமல் இருந்தான். யாரிடமும் சண்டையிடுவதைக் கூட நிறுத்தி விட்டான். அவன் *டோன்ட் கேர்* என்று இருந்தது, அவனது நண்பர்களுக்கு எரிச்சலை தந்தது.
ஒரு வாரத்திற்கு பிறகு
சாப்பிடாமல், ரிஷி தனது தட்டில் கோடுகளை வரைந்து கொண்டிருந்ததை பார்த்த கிரிவரன்,
"ஏன் குட்டி, உனக்கு சாப்பாடு பிடிக்கலையா?" என்றார்.
"ஹானஸ்ட்லி ஸ்பீக்கிங் டாட்... நான் அந்தப் பெண்ணை சந்திச்சே ஆகணும்"
YOU ARE READING
கர்வம் அழிந்ததடி...! (முடிந்தது)✔️
Romanceஅவன் அந்த கல்லூரியின் *டான்* என்று பெயர் பெற்றவன். அந்த கல்லூரி பெண்களின் கனவு நாயகன். அவனது கடைக்கண் பார்வைக்காக பெண்கள் தவம் கிடந்தார்கள். அதே கல்லூரியை சேர்ந்த நம் கதையின் நாயகி, முற்றிலும் வேறானவள். *காதல்* எப்பொழுதும் இரண்டு நேர் எதிர் துருவங்...