43 எதிர்பாராதது
ரிஷிவரனும், மதுமிதாவும் அன்பு இல்லம் வந்தடைந்தார்கள். ரிஷிவரனுக்காக காத்திராமல் மதுமிதா வீட்டினுள் சென்றாள். ஓடி வந்து அவளுடன் இணைந்து நடந்தான் ரிஷிவரன்.
கிரிவரனும், ரோகிணியும் வரவேற்பறையில் அமர்ந்து தேநீர் பருகிக் கொண்டிருந்தார்கள். ரிஷிவரன் மதுமிதாவுடன் வருவதை கண்ட அவர்கள், பிரமித்து போனார்கள். தேனீர் குவளையை மேஜையின் மீது வைத்துவிட்டு, அவளை நோக்கி ஓடினார் ரோகிணி. அவரை பின்தொடர்ந்தார் கிரிவரன்.
"மது, நீ என்னமா இங்க?"
"உங்களை பாக்கணும்னு அவ ரொம்ப ஆசைப்பட்டா. பாருங்க, உங்களுக்காக ஸ்வீட்ஸ் கூட வாங்கிட்டு வந்திருக்கா" என்றான் ரிஷிவரன் சிரிப்பை அடக்கிக்கொண்டு.
அவன் கூறியதை பற்றி எந்த கவலையும் கொள்ளாமல், தான் வாங்கி வந்த இனிப்பு டப்பாவை ரோகிணியிடம் நீட்டினாள் மதுமிதா.
"வா, வந்து உட்காரு. என்ன சாப்பிடுற?"
"ஒன்னும் வேணாம் ஆன்ட்டி"
"நீங்க அவளை விட்டுட்டு கிச்சனுக்கு போறதை அவள் விரும்பல. அதனால தான், அவளுக்கு ஒன்னும் வேண்டாம்னு சொல்றா" என்றான் ரிஷிவரன்.
"நான் தண்டபாணியை டீ போட்டு, கொண்டு வர சொல்றேன்"
சரி என தலையசைத்தாள் மதுமிதா.
"பாத்தீங்களா, நான் சொல்லல?" என்றான் ரிஷிவரன் சீரியஸாக.
ஒன்றும் புரியாத ரோகிணி, அவனை மௌனமாய் பார்த்தார்.
"நீயும் டீ சாப்பிடுறியா?" என்றார் ரோகிணி ரிஷிவரனிடம்.
"கண்டிப்பா... நான் மதுவுக்கு கம்பெனி கொடுக்கணும்ல" என்றான் ரிஷிவரன்.
அவன் ஏன் அவ்வளவு குதுகலமாய் இருந்தான் என்று புரியவில்லை ரோகிணிக்கு. அவர்களுக்கு இடையில் ஏதோ நடந்திருக்கிறதோ? மதுமிதாவும் எதுவும் கூறாமல் அமைதியாய் இருக்கிறாளே...! என்ன விஷயமாக இருக்கும்? ஒருவேளை, அவனது காதலை அவள் ஏற்றுக் கொண்டு விட்டாளோ?
YOU ARE READING
கர்வம் அழிந்ததடி...! (முடிந்தது)✔️
Romanceஅவன் அந்த கல்லூரியின் *டான்* என்று பெயர் பெற்றவன். அந்த கல்லூரி பெண்களின் கனவு நாயகன். அவனது கடைக்கண் பார்வைக்காக பெண்கள் தவம் கிடந்தார்கள். அதே கல்லூரியை சேர்ந்த நம் கதையின் நாயகி, முற்றிலும் வேறானவள். *காதல்* எப்பொழுதும் இரண்டு நேர் எதிர் துருவங்...