52 ஒப்புதல்

628 53 7
                                    

52 ஒப்புதல்

'நான் தான் என்னை திருமணம் செய்து கொள்ளும்படி ரிஷியிடம் கேட்டேன்' என்று மதுமிதா கூறியதை கேட்டு வாயடைத்து நின்றார் கிரிவரன். ஆனால் உண்மை தெரிந்த ரோகிணியோ, அவளை கூரிய பார்வை பார்த்தபடி நின்றார்.

"அவனை கல்யாணம் பண்ணிக்க சொல்லி நீயா கேட்ட?" என்றார் ரோகிணி.

பதில் கூறாமல் அமைதி காத்தாள் மதுமிதா.

"சொல்லு மது"

"அவளை ஒன்னும் கேட்காத ரோகிணி. பாரு அவ எவ்வளவு பதட்டப்படறா" என்றார் கிரிவரன்.

"ஏன் பதட்டப்படமாட்டா? பொய் சொன்னா பதட்டப்பட்டு தானே ஆகணும்?" என்றார் ரோகிணி.

"பொய்யா?" புருவம் உயர்த்தினார் கிரிவரன்.

"அவளை  கட்டாயப்படுத்தி கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சது குட்டி தான். முதல்ல அவ முடியாதுன்னு தான் மறுத்து இருக்கா"

"நிஜமாவா?" என்றார் கிரிவரன்.

"அதை குட்டியே என்கிட்ட ஃபோன்ல சொன்னான்"

தலை குனிந்து நின்ற மதுமிதாவை வியப்புடன் பார்த்தார் கிரிவரன். அவளுக்கு முன்னால் வந்து நின்ற ரிஷிவரன்,

"அவ என்னை கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கிட்டா. அதுக்காக நீங்க சந்தோஷம் தான் படணும்" என்றான்.

"என்ன உனக்கு அவசரம்னு தான் நான் கேட்கிறேன்"

"ஏன்னா, எக்காரணத்தை கொண்டும் நான் அவளை இழந்திடக் கூடாதுன்னு நினைச்சேன். அருணாச்சலம் அவளை கிட்நாப் பண்ணிக்கிட்டு போனப்போ ஒவ்வொரு நிமிஷமும் நான் எப்படி செத்து செத்துப் பொழச்சேன்னு எனக்கு தான் தெரியும்" என்று வெடித்தான்.

"குட்டி, நான் கேக்குற விஷயத்தை நீ புரிஞ்சுக்கோ. நாங்க உனக்கு கல்யாணம் பண்ணி வைக்க தயாரா இருக்கும் போது நீ ஏன் அவசரப்பட்டேன்னு தான் நான் கேட்கிறேன்" என்று கிரிவரனை பார்த்த ரோகிணி,

"கேளுங்க அவனை" என்றார்.

"கொஞ்சம் பொறு ரோகிணி. மது என்ன சொன்னதா நீ சொன்ன?"

கர்வம் அழிந்ததடி...! (முடிந்தது)✔️Where stories live. Discover now