4 உதவி
இரத்த வெள்ளத்தில் கிடந்த ரிஷியை பார்த்து, திகிலடைந்தாள் மதுமிதா. சந்தேகமில்லாமல் அவன் தன் சுயநினைவை இழந்திருந்தான். அவனது கையை பிடித்து நடித்துடிப்பை சோதித்தாள். குறையாமல் இருந்த அவனது நாடி துடிப்பு அவளுக்கு நிம்மதியை தந்தது. நேரத்தை வீணாக்காமல், 108க்கு ஃபோன் செய்தாள். சில நிமிடத்தில் அவசர ஊர்த்தி அந்த இடத்தை வந்தடைந்தது. சிறிதும் யோசிக்காமல் அவளும் அந்த ஆம்புலன்ஸ்ஸில் ஏறி, அவனுடன் மருத்துவமனைக்கு சென்றாள்.
தன் அப்பாவிற்கு ஃபோன் செய்யலாம் என்று அவள் தனது கைபேசியை வெளியே எடுத்த போது, அவள் அப்பா ஊரில் இல்லை என்பது அவள் நினைவுக்கு வந்தது. என்ன செய்வது என்பதை பற்றி சில நொடி யோசித்த அவள், அவளது அப்பாவின் நண்பர் ஜெயச்சந்திரன், அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிவது அவள் நினைவுக்கு வந்தது. அவர் மருத்துவமனையில் இருக்க வேண்டும் என்று கடவுளை வேண்டிக் கொண்டு அவருக்கு போன் செய்தாள். அந்த அழைப்பை ஏற்றார் ஜெயச்சந்திரன்.
"என்னடா மது, எப்படி இருக்க?"
"நான் நல்லா இருக்கேன் அங்கிள்"
"நீ நல்லா இருக்கேன்னா, எது உனக்கு என்னை ஞாபகப்படுத்துச்சி?" என்று சிரித்தார் ஜெயச்சந்திரன்.
"என்னோட ஃப்ரெண்ட்... இ மீன் என்னோட காலேஜ் மெட்டுக்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சு அங்கிள்"
"இப்போ அந்த *பொண்ணு* எங்க இருக்கா?"
"நான் *அவனோட* ஹாஸ்பிடலுக்கு வந்து கிட்டு இருக்கேன்"
"ஓ... நீயும் வரியா?"
"ஆமாம் அங்கிள்"
"ஒன்னும் பிரச்சனை இல்ல. நான் இன்னும் ஹாஸ்பிடல் தான் இருக்கேன். வா, நான் வெயிட் பண்றேன்"
"ரொம்ப தேங்க்ஸ் அங்கிள்"
"மென்ஷன் நாட்"
அழைப்பை துண்டித்த மதுமிதா, தன் அப்பாவுக்கு ஃபோன் செய்தாள்.
"என்னடா பண்ணிக்கிட்டு இருக்க?" என்றார் சாம்பசிவம்.
"அப்பா..."
YOU ARE READING
கர்வம் அழிந்ததடி...! (முடிந்தது)✔️
Romanceஅவன் அந்த கல்லூரியின் *டான்* என்று பெயர் பெற்றவன். அந்த கல்லூரி பெண்களின் கனவு நாயகன். அவனது கடைக்கண் பார்வைக்காக பெண்கள் தவம் கிடந்தார்கள். அதே கல்லூரியை சேர்ந்த நம் கதையின் நாயகி, முற்றிலும் வேறானவள். *காதல்* எப்பொழுதும் இரண்டு நேர் எதிர் துருவங்...