15 கிரிவரனின் ரோகிணி

820 66 9
                                    

15 கிரிவரனின் ரோகிணி

ரோகிணியின் புகைப்படத்தை பார்க்க விடாமல் தடுத்துக் கொண்டிருந்த, தன் கண்களிலிருந்து வழிந்து கொண்டிருந்த கண்ணீரை துடைத்துவிட்டு, மதுமிதாவின் கையிலிருந்த கைபேசியை பிடுங்கி பார்த்தார் கிரிவரன். அவர் வாயிலிருந்து வார்த்தைகள் வெளிவரவில்லை. அந்த புகைப்படத்தை பார்த்த ரிஷிவரன்,

"டாட்..." என்றான்.

"என்னோட ரோகிணி..."

"அவங்க எங்க இருக்காங்க? உனக்கு அவங்க இருக்கிற இடம் எப்படி தெரியும்?" என்றான் ரிஷிவரன்.

"அவங்க நாகப்பட்டினத்துல இருக்காங்க. என் ஃபிரண்டோட மேரேஜ்காக, போன வருஷம் நான் வேளாங்கண்ணி சர்ச்சுக்கு போயிருந்தேன். அங்க தான் அவங்களை மீட் பண்ணினேன். இன்னைக்கு லாவண்யா உன்னோட ஸ்டேட்டஸ்ஸை என்கிட்ட காட்டினா. நான் அவங்களை அடையாளம் தெரிஞ்சிக்கிட்டேன். நாகப்பட்டினத்துல இருக்கிற என்னுடைய ஃபிரண்ட் ஷெர்லீனுக்கு ஃபோன் பண்ணி ரோகிணி அம்மா அங்க தான் இருக்காங்களான்னு நிச்சய படுத்திக்கிட்டேன். அவங்க இன்னும் அங்க தான் இருக்காங்க. என்னோட ஃபிரண்ட் ஷெர்லின் தான் அந்த போட்டோவை எனக்கு அனுப்பினா"

அவள் கூறியதை கேட்ட கிரிவரன், அவள் கரங்களை பற்றி, தன் நெற்றியில் வைத்துக்கொண்டு வாய்விட்டு அழுதார்.

"அங்கிள், ப்ளீஸ் கம்போஸ் யுவர்செல்ஃப்..." என்றாள் கெஞ்சலாக.

இல்லை என்று தலையசைத்தபடி அவர் ஏதோ கூற முயன்றார். ஆனால், அவரால் ஒன்றும் கூற முடியவில்லை. தங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்துவிட்ட திடீர் மாற்றத்தை புரிந்து கொள்ள முடியாத ரிஷிவரன், சிலை போல் நின்றான். பதினைந்து ஆண்டுகளுக்கு முன், இறந்து விட்டதாக நினைத்துக் கொண்டிருந்த அவனது அம்மா உயிரோடு இருக்கிறார் என்பதை அவனால் நம்ப முடியவில்லை.

அசைவற்று நின்று கொண்டிருந்த அவனால் தனக்கு எந்த பிரயோஜனமும் இல்லை என்பதை உணர்ந்து கொண்ட மதுமிதா, பாலாவை நோக்கினாள். பாலாவும் சுதாகரனும் அவர்களை நோக்கி விரைந்தார்கள்.

கர்வம் அழிந்ததடி...! (முடிந்தது)✔️Where stories live. Discover now