10 செய்நன்றி அறிதல்

980 63 10
                                    

9 செய்நன்றி அறிதல்

மறுநாள்

தன் வகுப்பில் பாடத்தை கவனித்துக் கொண்டிருந்தாள் மதுமிதா. சட்டென்று அவள் வகுப்பின் சூழ்நிலை சூடேறிப் போனது. மதுமிதாவின் இதயத்துடிப்பு தறிகெட்டு ஓடத் துவங்கியது, அவளது வகுப்பின் வாசலில் பூங்கொத்துடன் நின்றிருந்த ரிஷியை பார்த்து. அவளுக்கு முன்னால் அமர்ந்திருந்த லலிதாவின் பின்னால் ஒளிந்து கொள்ள முயன்றாள் மதுமிதா. ஆனால், ரிஷியின் அலசும் கண்களில் இருந்து அவளால் தப்ப முடியவில்லை.

அந்த வகுப்பின் பேராசிரியர் அவனை கேள்விக்குறியுடன் பார்த்தார். ஆனால் கேள்வி எழுப்பவில்லை. ஏனென்றால், அவருக்குத் தெரியும், ரிஷி யார் என்று.

"நான் வந்த வேலையை, ஃப்யூ மினிட்ஸ்ல முடிச்சிட்டு போயிடுறேன் சார்" என்றான்.

"சரி" என்றார் அந்த பேராசிரியர்.

வகுப்பின் உள்ளே நுழைந்த ரிஷி, நேராக மதுமிதாவிடம் சென்றான். அவள் பேராசிரியரை பார்த்து மென்று விழுங்கினாள்.

"நீ எனக்காக செஞ்ச எல்லாத்துக்காகவும் உனக்கு ரொம்ப தேங்க்ஸ்" என்று அந்த பூங்கொத்தை அவளிடம் நீட்டினான்.

"என்ன ஆச்சு ரிஷி?" என்றார் அந்த பேராசிரியர்.

"கொஞ்ச நாளுக்கு முன்னாடி எனக்கு ஆக்சிடென்ட் ஆச்சி, சார்..."

"ஆமாம்... நானும் கேள்விப்பட்டேன். ஸ்டுடென்ட்ஸ் எல்லாம் அதைப்பத்தி பேசிக்கிட்டாங்க"

"என்னை ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி, பாத்துக்கிட்டது மது தான் சார்"

"அப்படியா?" என்றார் அந்த பேராசிரியர் ஆச்சரியத்துடன்.

மதுமிதாவின் தோழிகள் அனைவரும் அவளை நம்ப முடியாமல் பார்த்தார்கள். இதுவரை, அவள் அவர்களிடம் கூட அதை பற்றி எதுவும் கூறவில்லையே...!

"வாங்கிக்கோ மது" என்றார் அந்த பேராசிரியர். அவருக்கு தெரியும், அவள் வாங்காத வரை, ரிஷி அங்கிருந்து செல்ல மாட்டான் என்று.

கர்வம் அழிந்ததடி...! (முடிந்தது)✔️Where stories live. Discover now