❤ 23 ❤

524 11 2
                                    

என் நெஞ்ச வானில்
வானவில் தருபவன்
நீயோ..
மயக்கம் கலந்திட
தயக்கம் பாதியென..
மறைகிறேனடா நான்
உன் பார்வையில்
மாயமாய்..

அவன் வேக நடைக்கு ஈடு கொடுக்க முடியாமல் அவன் பின்னே மூச்சிரைக்க ஓடிக்கொண்டிருந்தாள் சாரு.

"சார் சார் அடுத்தவங்க பொருள திருடுரது தப்பு தெரியாதா..உங்களுக்கு யாரும் சொல்லி தரலயா.."

அவளது கேள்விக்கான பதில் தான் அவனிடம் இருந்து வரவில்லை. அவளும் இது எதிர்பார்த்தது தான்.

கோபமாய் அவனை தாண்டி ஓடி வந்து அவன் வழியை மறைத்து நின்றாள்.

சக்தி அவளை பொருட்படுத்தாது சுற்றிக்கொண்டு நகரப்போக மீண்டும் அவன் வழியை மறைத்தாள் சாரு.

கோபமாய் நிமிர்ந்தவனது கோபம் அனைத்தும் அவள் முகத்தை கோபமாய் வைத்து கையை கட்டி நியாயம் வேண்டும் என்ற ரீதியில் நின்றிருந்த விதம் கண்டு மெழுகென கரைந்து போனது.

முகத்தில் மென்னகை பரவ..

"என்ன.."என்றான் அவன் மென்மையான குரலில்.

என்ன இவன் சிரிக்கிறான்.. தலையை சொறிந்து கொண்ட சாரு..

"என்னோட மால.." என்றாள்.

ஒரு முறை சிரித்து விட்டு அவளது கையை பற்றிக்கொண்டு முன்னே நடந்தான் சக்தி.

"கைய விடுங்க.." எப்போதும் போல் அவள் போராட அவன் பிடியும் வழமை போலவே மென்மையாய் இறுகியது..

அவன் அவளது கையை பற்றி நடந்து கொண்டு பார்கிங்கில் இருந்து வெளியேறவும்..

"சார்..உங்க கார் அங்க இருக்கும்.." என்றாள் சாரு பார்கிங் பக்கமாய் திரும்பி பார்த்துக்கொண்டு நடந்தவண்ணம் ..

"தெரியும் நீ வா.." சக்தி நடக்க சாரு நிற்கவும் முடியாமல் நடக்கவும் முடியாமல் ஓடிக்கொண்டிருந்தாள்.

மாயம் செய்தாயோ ✔️ (Mayam Seidhayo)Where stories live. Discover now