❤ 29 ❤

412 13 5
                                    

கண்ணோடு தோன்றி
கனவில் மாயம்..
கண்விழித்தால் மறையும்
கானல் மாயம்..
இந்த ரணமும்
உணர்வற்றே
மறைந்திட..
மாயம் செய்திடு
மாயவளே..

அவள் கேள்வியில் திகைத்த சாரதா.."மாயா...நான் சொல்லுறத கொஞ்சம்..." என ஏதோ கூற தொடங்கும்முன் அவரைத்தடுத்தவள்..

"அத்தை இதுக்கு மேலயும் நடிக்க வேணா..நான் மாயா இல்ல ரம்யா.." என்று கராராய் கூறிவிட்டு

"சொல்லுங்க என் அம்மாவ என்ன செய்தீங்க.." கேட்டாள்..

குற்ற உணர்வில் தலைகுனிந்தவாறே பேச ஆரம்பித்தார் சாரதா..

" அப்போ எனக்கு பணம் மட்டும் தான் தெரிஞ்சது.. என் அண்ணா சொல்லாம உங்க அம்மாவ கல்யாணம் பன்னிகிட்டதுக்கு அப்புறம் எனக்கு ரொம்பவே கோபம்.
உங்க அம்மாக்கு சொத்துன்னு சொல்லிக்க ஒன்னும் இல்ல.. அவங்கள எவளோ கொடுமை செய்தேன் ஆனாலும் சிரிச்சிகிட்டே எல்லாம் செயவாங்க நான் சொல்ர எல்லாத்தையுமே.

ஆனா அண்ணாகிட்ட ஒரு வார்த்த சொன்னது இல்ல என்ன பற்றி..ஒருநாள் அண்ணா வீட்டுக்கு வழமைக்கு முன்னமே வரவும் நான் பேசினத கேட்டு உன் அம்மாவ அழச்சிட்டு வேற வீடு பார்த்துட்டு போய்ட்டாரு.
அதுல இருந்து குடும்பத்த பிரிச்சிட்டான்னு இன்னும் கோபம் அவ மேல.. நான் பிறந்தது முதல் அண்ணாதான் எனக்கு எல்லாம்.. அப்படி இருந்தவர மாத்திட்டான்னு கோபமா வந்திச்சி...

பழிவாங்க ஒரு சந்தர்ப்பம் பார்த்துட்டே இருந்தன்.. அண்ணாவோட மறைவுக்கு பின்ன.. ஐந்து வயசான உன்னையும் தூக்கிட்டு என்கிட்ட வந்தா..நான் இங்க இருக்கலாம் என்று சொல்லிட்டு உறவு பிரியுற வலின்னா என்ன என்று உன் அம்மாக்கு உணர வைக்கனும்ன்னு யோசிச்சி அவங்களுக்கு தெரியாமலே உன்ன கொண்டு போய் எங்கயாவது போட சொல்லிட்டன்..உன் அம்மாக்கு தெரியாது இது.. உன்ன தேடி தேடி கெஞ்சி கேட்டா என்கிட்ட..நான் சொல்லல.. அப்புறம் அந்த கவலையிலே..." அவர் இழுக்கவும் அவருக்கு பின்னால் ஏதோ சத்தம் கேட்கவும் திரும்பிப்பார்த்தார்.

மாயம் செய்தாயோ ✔️ (Mayam Seidhayo)Where stories live. Discover now